கவர்ச்சிக்கு நோ சொல்லி சினிமாவில் ஜெயித்த 5 நடிகைகள்.. நதியாவை பின்தொடரும் இளம் நடிகை

தற்போது இருக்கும் நடிகைகள் பலரும் ஆரம்பத்திலேயே கவர்ச்சி காட்டி பட வாய்ப்புகளையும், ரசிகர்களையும் தட்டி தூக்குகின்றனர் ஆனால் ஒரு சில நடிகைகள் இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்ததோடு மட்டுமல்லாமல் கேரியரில் ஜெயித்தும் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

சாய் பல்லவி  : பிரேமம் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான இவர் டாப் ஹீரோக்கள் முக்கியமில்லை கதாபாத்திரம் தான் முக்கியம் என கொள்கையோடு நடித்து வரும் சாய் பல்லவி பெருமளவு கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது ஆனால் தன்னுடைய ஆக்டிங் மற்றும் சிரிப்பின் மூலம் கோடான கோடி ரசிகர்களை போட்டுள்ளதோடு மட்டுமல்லாமல்  திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை என்ற அந்தஸ்தையும் அவர் பெற்றிருக்கிறார்.

அழகுக்கு அழகு சேர்க்க ஆப்ரேஷன் செய்து கொண்ட 5 நடிகைகள்.. சோகத்தில் முடிந்த ஸ்ரீதேவியின் சினிமா பயணம்

கீர்த்தி சுரேஷ் : சோசியல் மீடியாவில் கிளாமர் காட்டினாலும் படம் என்று வந்துவிட்டால் இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் நடிக்கிறார். தன்னுடைய நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை வளைத்து போட்டு வருகிறார்.

ஷாலினி : குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த ஷாலினி.  ஹீரோயினாக அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, அமர்க்களம் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்தார். ஆனால் கவர்ச்சி காட்டி நடித்ததே கிடையாது. அஜித்தை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்ந்தார்.

ரீ ரிலீசான முத்து – ஆளவந்தான்.. வசூலில் முந்தியது யார் தெரியுமா.?

நதியா : திரையுலகில் கண்டிஷன் போட்டு நடிக்கக்கூடிய நடிகைகள் ஒருவர் நதியா. லிப்லாக், கட்டிபிடிக்கிறது போன்ற காட்சிகள் இருந்தால் அதை தூக்க சொல்லிவிட்டு தான் நடிப்பார் அப்படி இல்லை என்றால் படத்தில் நடிக்க மாட்டார் இப்படிப்பட்ட நதியாவுக்கு தற்பொழுது 57 வயதாகிறது இன்றும் இவர் இளமையுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேவதி : 80 காலகட்டங்களில் டாப் ஹீரோக்களுடன் நடித்த பேரையும் புகழையும் சம்பாதித்த ரேவதி கவர்ச்சி காட்டி நடித்ததே இல்லை தனது நடிப்பு திறமையின் மூலம் இல்லத்தரசிகளும், ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து இழுத்தார்.