கதிரை சரமாரியாக வெட்டி சாய்க்கும் ரவுடி கும்பல்.! புருஷன் வெட்டுப்படுவதை பார்த்து பதறி அடித்து ஓடிவரும் நந்தினி.. பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ

Ethirneechal serial: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. அதாவது தற்போது நடைபெற இருக்கும் எலக்ஷனில் குணசேகருக்கு எதிராக எஸ்.கே.ஆர் தனது மனைவி சாருபாலாவை நிற்க வைத்தார்.

எனவே குணசேகரன் தனது மனைவி ஈஸ்வரியை எலெக்ஷனில் நிற்க வைத்துள்ளார் ஆனால் திடீரென்று சாருபாலா இந்த எலக்ஷனில் இருந்து விலகி இருப்பதனால் குணசேகரன் ஈஸ்வரியையும் இதிலிருந்து விலகுமாறு கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் அதற்காக நான் ஜெயிக்க வேண்டும் என முடிவு செய்திருக்கும் நிலையில் இந்த எலக்ஷனில் இருந்து விலக முடியாது என குணசேகரனிடம் உறுதியாக கூறுகிறார்.

நினைத்தேன் வந்தாய் : “வண்ண நிலவே” பாட்டில் வந்தது ரம்பா தொடையே கிடையாதா.! பல வருடம் கழித்து உண்மையை உடைத்த இயக்குனர்..

எனவே ஈஸ்வரியை குணசேகரன் அடித்து வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறார் தற்பொழுது குணசேகரன் ஈஸ்வரி இருவரும் எலக்ஷனில் போட்டி போட இருக்கின்றனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை நோக்கி கதைகளும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

கண்டிப்பாக ஈஸ்வரி இந்த எலக்ஷனில் ஜெயித்து குணசேகரின் ஆட்டத்தை அடக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நந்தினி தனது அப்பாவிடம் வீட்ட பத்தி யோசிக்காமல் இனி என் வாழ்க்கை பத்தியும் தாரா வாழ்க்கை பத்தி யோசிக்க போறேன் என கூறுகிறார்.

பிரம்மாண்டமாக நடைப்பெற்று முடிந்த ரெடின் கிங்ஸ்லி திருமணம்.! அழகில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் மணப்பெண்..

பிறகு வீட்டில் குணசேகரன் கதிரை கிளம்பு என கூற அதற்கு எங்க கிளம்புறீங்க என நந்தினி கேட்கிறார். இதற்கு கிரைண்டர் வாய வச்சிட்டா இனிமே விளங்கின மாதிரி தான் என அசிங்கப்படுத்துகிறார். இதனை அடுத்து கதிர் சென்ற இடத்தில் ரவுடிகள் சிலர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதனை பார்த்த நந்தினி, தாராவும் கதிரை காப்பாற்றுவதற்காக ஓடுகின்றனர்.