மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! உடனே நடவடிக்கை எடுத்த மீட்பு குழுவினர்..

Michaung Cyclone: எதிர்நீச்சல் சீரியல் நடிகை மிக்ஜாம் புயலில் சிக்கியிருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது பத்திரமாக அவர் மீட்டெடுக்கப்பட்டிருப்பது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் இதற்காக தனது நன்றியையும் கூறியுள்ளார்.

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் கனிகா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் நடித்து இருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

கைகோர்ப்போம் துயர் துடைப்போம்.. களத்தில் இறங்கிய தளபதி விஜய்

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. ஆயிரம் கணக்கான மக்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் சமூக வலைதளங்களில் தங்களுக்கு உதவி வேண்டும் என கேட்டு வரும் நிலையில் திரை பிரபலங்கள் முதல் மக்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

kaniha
kaniha

அந்த வகையில் நடிகை கனிகா தனது குடியிருப்பு இடத்தை சுற்றி வெள்ளம் புகுந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக கூறினார். இதனை அடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்று கனிகாவை பத்திரமாக மீட்டு எடுத்துள்ளனர்.

படம் சரியாக வராததால் டென்ஷன்னா அஜித்.. ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை

இதற்காக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள கனிகா நாங்கள் மீட்கப்பட்டோம் குடிநீர் வினியோகம் இல்லை மின்சாரம் இல்லை வெள்ள நீர் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எங்களுக்கு வேறு வழியே இல்லை மீட்பு குழுவினருக்கும் அவர்கள் முயற்சிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.