சூப்பர் ஹிட் அடித்த ஜெயம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.? கடைசியில் சூப்பர் ஸ்டாருக்கு தெரிந்த உண்மை

Rajini : தமிழ் சினிமாவில் வெற்றி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி.  இவர் முதலில் ஜெயம் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும் என அடுத்தடுத்த வெற்றி படங்களை குறுகிய காலத்திலேயே கொடுத்து பெயரையும் புகழையும் சம்பாதித்தார்.

இப்படிப்பட்ட ஜெயம் ரவிக்கு தனி ஒருவன் படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இதன் மூலம் அவருடைய மார்க்கெட் உயர்ந்தது அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து ஆக்சன் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கைவசம் பிரதர், சைரன், காதலிக்க நேரமில்லை, THUG LIFE, GENIE போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகைகள்.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாடல் அழகி….

ஜெயம் ரவி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க அவருடைய நடிப்பு திறமையை ஒரு காரணமாக இருந்தாலும் அவரது தந்தை அவரை ஆரம்பத்தில் தூக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஜெயம் ரவியின் தந்தை தயாரிப்பாளர் மற்றும் எடிட்டராகவும் பணியாற்றி வருகிறார். அவருடைய பெயர் மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி பற்றி மோகன் பேசி உள்ளார்.

அவர் சொன்னது என்னவென்றால்.. ஒரு சமயத்தில் நானும், ரஜினியும் அதிகம் பேசிக் கொள்வோம் அப்படி ஜெயம் படத்தின் First copy நான் பார்க்கும் பொழுது தகவல் எப்படியோ ரஜினிக்கு தெரிந்து விட்டது உடனே என்னுடன் நிச்சயம் படம் பார்க்க வருவதாக கூறியிருந்தார் அவர் சொன்னது போலவே ரஜினியும் அவரது மனைவி மற்றும் இரு மகளுடன் வந்து சேர்ந்தார்.

என் வீட்டுக்கு வந்து பாத்தியா? பயில்வான் ரங்கநாதனை அனைவரும் முன்பும் கிழித்து தொங்க விட்ட கீர்த்தி பாண்டியன்

ஜெயம் படத்தின் இடைவெளியில் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா எனது மகன்கள் என தெரியாமல் ரஜினிகாந்த் என்ன சார் புது ஹீரோவுக்கு இவ்வளவு செலவு பண்ணி இருக்கீங்களா என கேட்டார் அப்பொழுது நான் அவரிடம் இது புது ஹீரோ இல்ல சார் என்னுடைய இரண்டு மகன்களின் வாழ்க்கை தான் இந்த படம் எனக் கூறியதும் அதன் பின்னர் ரஜினி உண்மையை உணர்ந்து கொண்டார் என மோகன் தெரிவித்துள்ளார்.