என் வீட்டுக்கு வந்து பாத்தியா? பயில்வான் ரங்கநாதனை அனைவரும் முன்பும் கிழித்து தொங்க விட்ட கீர்த்தி பாண்டியன்

Keerthi Pandiyan: நடிகை கீர்த்தி பாண்டியன் தனது பர்சனல் வாழ்க்கை குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கியுள்ளார். சினிமா பிரபலங்கள் குறித்து தொடர்ந்து ஏராளமான தகவல்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருபவர் தான் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.

ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வந்த பயில்வான் ரங்கநாதனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி இவர் சினிமா பிரபலங்கள் குறித்து அவதூறான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

ரஜினியின் உழைப்பாளி திரைப்படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது பல வருடங்கள் கழித்து உண்மையை கூறிய பிரபலம்.

இந்நிலையில் சமீபத்தில் அசோக் செல்வன் மற்றும் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் பெற்றோர் சமதத்துடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் கீர்த்தி பாண்டியன் நிறம் மற்றும் உருவ கேலி செய்யப்பட்டதனால் இவரை  எதுக்கு அசோக் செல்வன் திருமணம் செய்து கொண்டார் எனவும் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

பிறகு அசோக் செல்வன் பேட்டி ஒன்றில் எனக்கு  கீர்த்தி பாண்டியன் தான் அழகு என மிகவும் பெருமையாக பேசி அனைத்திற்கும் பதிலடி கொடுத்தார். இதனை அடுத்து சமீபத்தில் கண்ணகி படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கீர்த்தி பாண்டியனிடம் பயில்வான் ரங்கநாதன் வழக்கம்போல விவகாரமாக பேசி வாங்கி கட்டிக் கொண்டார்.

எதற்காக திடீர் திருமணம் செய்துக் கொண்டார்கள் ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா.. உண்மையை உடைத்த பிரபலம்

அதாவது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பயில்வான் ரங்கநாதன் வீட்டில் தான் இருவரும் சண்டை போடுறீங்கனா எதுக்கு பட ரிலீஸ்லயும் ஏன் இப்படி சண்டை போட்டுக்குறீங்க என கேட்க இதற்கு கீர்த்தி பாண்டியன் என் வீட்டுக்கு வந்து நீ பார்த்தியா என்றும் எங்கள் இருவருக்கும் சண்டை எப்போது வந்தது என்று கேள்வி எழுப்பி பல்ப்பு கொடுத்தார். இவ்வாறு இந்த அளவிற்கு பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான பதிலடி கொடுத்தது கீர்த்தி பாண்டியன் ஆக தான் என ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.