கையில் வேட்டு விழுந்ததால் காதல் பற்றிக் கொண்டது.! அமர்க்களம் அஜித் ஷாலினி காதலை புட்டு புட்டு வைத்த இயக்குனர்..

Actor Ajith Kumar: தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒரு ஜோடி தான் தல மற்றும் ஷாலினி அமர்க்களம் திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் போது இவர்களுக்கிடையே காதல் ஏற்பட பிறகு தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் கொஞ்சம் கூட காதல் குறையாமல் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது அமர்க்களம் பட இயக்குனர் சரண் அஜித் மற்றும் ஷாலினியின் காதல் குறித்த ஒரு பதிவினை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் நடிகரான அஜித் 1993ஆம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

பாதி கதையை சொல்லி அஜித்தை நடிக்க அழைத்த பிரபல இயக்குனர்.! ஆப்பு எந்த பக்கம் இருந்து வேணாலும் வரும்

இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அஜித் தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். தல அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அப்படி தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஹீரோயினாக நடிக்கவும் தொடர்ந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த வந்த ஷாலினி அஜித்துடன் இணைந்து 1999ல் சரண் இயக்கத்தில் உருவான அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தார்.

10 வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம்.. எதிர்பார்ப்பை கூட்டிய தங்கலான்

அப்பொழுது அஜித் ஷாலினிடம் அவரது காதலை கூற ஷாலினி ஓகே என சொல்ல பிறகு இருவரும் குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் 2000ஆம்  ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திவிட்ட ஷாலினி தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.

director saran
director saran

சமீபத்தில் அஜித் ஷாலினி தனது 23வது திருமண நாளை கொண்டாடிய நிலையில் அமர்க்களம் படத்தின் இயக்குனர் படப்பிடிப்பின் போது எடுத்த ஒரு போட்டோவை பகிர்ந்து அதில் அஜித் மற்றும் ஷாலினியின் காதல் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் மூன்றாவது நாளில் அஜித் படப்பிடிப்பில் இணைந்தாராம் அன்று அஜித் கையில் வெட்டுப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் காதலில் கட்டுப்பட்டதாகவும் இயக்குனர் பதிவிட்டுள்ளார்.