திரையுலகில் எந்த நடிகையும் செய்யாததை செய்து காட்டி அதிர்ச்சி கொடுத்த நடிகை..

Samyuktha Menon: தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் சம்யுக்தா மேனன். தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் அண்மையில் செய்த விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா மேனன் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் தனது கேரியரை தொடங்கினார் அப்படி பாப்காரன் என்ற படம் மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு வெளியானது இதில் ஹீரோயினாக நடித்த மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கும் சம்யுக்தா தமிழில்  ஆக்சன் திரில்லர் படமான களரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.? காதலன் சொன்னதால் நடிக்க மறுத்து பிறகு தலையில் அடித்துக் கொண்ட நடிகை..

இப்படம் 2018ஆம் ஆண்டு வெளியானது ஆனால் இந்த படம் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை அனைவரும் இவர் வாத்தி திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார் என நினைத்து வருகிறோம். ஆனால் வாத்தி படத்திற்கு முன்பே தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் தான் வாத்தி. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தார் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இதனை அடுத்து அண்மையில் மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார் அப்படத்தின் இயக்குனர் மேடையில் சம்யுக்தா பற்றி கூறியிருந்தார். அதாவது தனது 12 வருட சினிமா வாழ்க்கையில் இது போன்ற ஒரு நடிகையை பார்த்ததே இல்லை என்றும் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு 65 சதவீதம் சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து சம்யுக்தாவிடம் மீதி பணத்தை கொடுக்க கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க என கேட்டுள்ளார்.

சீரியலில் சைடு கேரக்டரில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள்.. பகிர் தகவலை கூறிய பாரதிகண்ணம்மா 2 நடிகை…

அதற்கு சம்யுக்தா எந்த பிரச்சனையும் இல்லை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தாராம் இதனை அடுத்து படம் ரிலீஸ் ஆன பொழுது படம் தோல்வின்னு சொன்னாங்க எனவே அது மட்டுமல்லாமல் இந்த படம் வெற்றி பெறாத சூழ்நிலையில் நீங்கள் கடுமையான பொருளாதார சிக்கலில் இருப்பீங்க மேலும் இந்த படத்தால் பொருளாதார பயணையும் பெற்றிருக்க மாட்டீர்கள்.

எனவே எனக்கு தரவேண்டிய மீதி பணத்தை தர வேண்டாம் அடுத்தமுறை இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு படத்தை பண்ணலாம் அந்த படம் வெற்றி பெறும் பொழுது அதற்குரிய பணத்தை நானே பெற்றுக் கொள்கிறேன் என கூறினாராம். இவ்வாறு முழு சம்பளம் கொடுத்தால் மட்டுமே டப்பிங் மற்றும் ப்ரோமோஷன் பணிகளுக்கு வருவேன் என ஏராளமான நடிகைகள் கூறிவரும் இந்த சூழலில் சம்யுக்தா மேனனை பாராட்டி வருகிறார்கள்.