குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.. சூர்யா குறித்து அந்தர் பல்டி அடித்த பாலா

Bala : தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா ஆனால் இவர் எடுத்துள்ள திரைப்படங்கள் விரல்விட்டு என்னும் அளவுக்குத்தான் இருக்கிறது. முதலில் பாலா விக்ரமை வைத்து “சேது” படத்தை எடுத்து அறிமுகமானார் முதல் படமே அதிரிபுதரி ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து நந்தா, பிதா மகன்..

நான் கடவுள் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து பாலாவின் மார்க்கெட்டும் உச்சத்தை தொட்டது. இப்படி ஓடிய பாலா கடைசியாக எடுத்த அவன் இவன் சுமாராக ஓடியது மற்றபடி பரதேசி தாரதப்பட்டை நாச்சியார் போன்ற படங்கள் தோல்வியை தழுவின.

எவ்வளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா.. லியோ திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இதிலிருந்து மீண்டு வர வர்மா படத்தை இயக்குனர் அந்த படம் மரண அடி வாங்கியது. கடைசியாக சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை எடுத்து வந்தார். ஆனால் இந்த படத்தின் பொழுது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது அதன் பிறகு சூர்யா உடனடியாக சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

பாலா வணங்கான் படத்தில் அருண் விஜயை வைத்து எடுத்து வருகிறார் இனி சூர்யா – பாலா இணைய போவதில்லை என பல செய்திகள் வெளியானது இந்த நிலையில் டெவில் திரைப்படத்தின் விழாவில் பாலா கலந்து கொண்ட நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் மீண்டும் நீங்கள் சூர்யாவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

ஒரே நாளில் மோதி கொண்ட விஜயகாந்த், அஜித் விஜய் படங்கள்.! எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.?

அதற்கு சற்றும் தயங்காத பாலா இது என்ன கேள்வி என் தம்பியுடன் இணைவதற்கு என்ன வாய்ப்பு என்று கூறி சென்றார்.  சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே எந்த மனக்கசப்பும்,வருத்தமும் இல்லை என ஒரு தரப்பு ரசிகர்கள் சொல்லுகின்றனர். மீடியா வாயை மூட பாலா இப்படி ஒரு பதிலை  சொல்லி விட்டு போய் உள்ளார் என மற்றொரு தரப்பு ரசிகர்கள் சொல்லிவருகின்றனர்.