உருவாக்கியவன் நீயே திமிராய் இரு.. உண்மையும், சத்தியமும் வெல்லும்.. அமீருக்கு ஆதரவு கொடுத்த சேரன்

Cheran : பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி பெரிய ஹிட் அடித்த பிறகும் காலம் கடந்து அந்த படத்தை பற்றி மக்கள் மற்றும் ரசிகர்கள் பேசுகின்றனர் அதே சமயம் இந்த படம் உருவானதிலிருந்து இப்பொழுது வரையிலும் பிரச்சனையையும் இருந்து வருகிறது.

சமீபத்தில் கூட பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய் கணக்கு கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா கூற அது பெரிய சர்ச்சையாக வெடித்தது. அமீருக்கு சப்போட்டாக  சமுத்திரகனி, சசிகுமார் போன்றவர்கள் முதல் ஆளாக களத்தில் குதித்தனர் அதன் பிறகு கரு பழனியப்பன், பாரதிராஜா, சுதா கொங்காரா, பொன்வண்ணன்..

ரஜினி, கமலுக்கு அடுத்து அஜித் தான்..! நடிகர் பிரபு பேசியதை கொண்டாடும் ரசிகர்கள்

கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் அமீருக்கு ஆதரவு கொடுத்து சில பதிவுகளை போட்டுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. அமீர் மந்தையில் நின்னாலும் நீ வீரபாண்டி தேரு..

காலம் நூறு கடந்தாலும் பண்பும், புகழும் கண்ணை மறைந்தாலும்  அவர்களை உருவாக்கியவன் நீயே திமிராய் இரு.. நீயின்றி அவர்கள் இல்லை என்ற கர்வம் மட்டும் போதும்.. உண்மையும் சத்தியமும் வெல்லும் காலம் எல்லா கலங்கத்தையும் துடைக்கும் படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள் ஞானவேல் ராஜா அமீரின் நேர்மையும், உண்மையும், நாணயமும்..

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. ஒருமுறை கூட பார்க்கல.? நடிகை கீர்த்தி சுரேஷின் பதிலால் காண்டான ரசிகர்கள்

நான் நன்கு அறிவேன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது கண்டுகிறேன் உங்களை கார்த்தியும், சூர்யாவையும் உங்களை இந்த நேரம் உன் தவறை கண்டித்திருக்க வேண்டும் என தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சேரன் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குவிந்த வண்ணமே இருக்கிறது.