அமலா பால் நம்பி ஏமாந்துட்டாங்க.. நிறைய வலி இருக்கு.! பிரபலம் பேட்டி

Amala Paul: நடிகை அமலாபால் தனது வாழ்க்கையில் நிறைய பேரை நம்பி ஏமாந்து விட்டார் என பிரபலம் பேட்டியளித்திருப்பது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மைனா, தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமானார்.

தலைவா திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்கும் பொழுது இப்படத்தினை இயக்கிய இயக்க ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர் விவாகரத்திற்கு பிறகும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அமலாபால் அண்மையில் தனது பிறந்தநாள் அன்று காதலர் ஜகத் தேசாயின் போட்டோவை ஷேர் செய்து தனது காதல் குறித்து அனைவருக்கும் தெரிய வைத்தார்.

இவர்களுக்கு கடந்த 5ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண ஜோடிகளுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில அமலாபால் குறித்து ஏராளமான விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வர இதற்கு கோடாங்கி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்பத்தாவை கடத்திய குணசேகரன்.! உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கும் ஜீவானந்தம்.. பதட்டத்தில் மருமகள்கள்

அவர் கூறியதாவது, அமலா பாலுக்கு மட்டும் வலி என்று சொல்ல முடியாது திரைத்துறையில் வரும் பெண்கள் அனைவருக்கும் வெளியில் சொல்ல முடியாத ரணங்கள் அதிகமாக தான் இருக்கும். நடிகை அமலாபால் அனைவரிடத்திலும் நன்றாக பேசக்கூடியவர் அது அவரிடம் நேரடியாக பேசி பழகுபவர்களுக்கு நன்றாக தெரியும்.

அவர் முதலில் நடித்த சிந்து சமவெளி படத்திலிருந்து அதற்கான வலியை அவர் அனுபவித்தார். இப்போதும் தனது முதல் படம் மைனா என்றுதான் சொல்லுறாங்க அதற்கு காரணம் சிந்து சமவெளி படத்தின் மோசமான கதை. அதேபோல அமலா பால் இயக்குனர் விஜய்யை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமண வாழ்க்கையில் அவருக்கான சுதந்திரம் இல்லை, அவர் செய்த பல தவறுகள் சுட்டிக் காட்டப்பட்ட அவரை நெருங்கியதால் முதல் கணவரை விட்டு பிரிந்தார்.

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. சிக்குமா சூனியக்காரி டீம்

எப்போதும் காதலித்து தான் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் அமலாபால் மற்ற நடிகைகளை விட அதிகமான வலிகளை அனுபவித்து இருக்கிறார். அதற்கு காரணம் அவர் அனைவரையும் நம்பிவிடுவார் ஆடை படத்தில் கூட அமலாபால் நடித்தது அப்படித்தான் இந்த படம் வெளியானால் உச்சத்திற்கு போயிடுவீங்க படத்தின் கதை அப்படிப்பட்டது என்று சொல்லி நம்ப வைத்தனர் இப்படி பலரை நம்பி ஏமாந்தவர் தான் அமலா பால் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார் கோடாங்கி.