ponniyin-selvan-1

மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ‘சோழ சோழ’ பாடல் வீடியோ இதோ.!

தற்பொழுது பிரம்மாண்டமாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தினை பற்றி ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. மேலும் ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக இந்த திரைப்படத்தின் ரிலீசாக காத்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் தான் தற்பொழுது வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் புரொடக்ஷன் பணிகளை மிகவும் தீவிரமாக பட குழுவினர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நில்லையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த பொன்னி நதி என்ற பாடலும் டீசரும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க, இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளில் சத்திய பிரகாஷ், வி எம் மகாலிங்கம் மற்றும் நகல் அபியரங்கர் ஆகியவர்கள் பாடியுள்ளனர்.பொன்னி நதி பாடல் வெளியாகி வந்திய தேவனின் பெருமைகளை கூறிய நிலையில் தற்பொழுது சோழ சோழ பாடல் கரிகால சோழனின் பெருமையை கூறுகிறது.

மேலும் சற்றுமுன் வெளியாகிய இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், நிழல்கள் ரவி, மோகன் ராமன்,பாலாஜி சக்திவேல் ஆகியோர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க லைப் நிறுவனம் தயாரிப்பில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இயக்கி உள்ளது.

 

பொண்ணும் பொண்ணும், பையனும் பையனும் காதலிச்சா தப்பா.? பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் டிரைலர் இதோ..

பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பா ராஜித் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்கள் இயக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நட்சத்திரம் நாகர்கிறது.

இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சற்று முன்பு வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த திரைப்படத்தில் கலையரசன்,காளிதாஸ், ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இவர்களை தொடர்ந்து இப்படத்திற்கு தேன்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒலிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஒரு இளைஞர் கூட்டம் லவ் குறித்து டிஸ்கஸ் செய்வதுதான் இந்த திரைப்படத்தின் முழு கதை.ட்ரைலர் கூறுவதாக ஒரு பெண் மீது ஆணுக்கு கவர்ச்சி ஏற்படுவது எதனால் காதலித்த பின் காதல் வெற்றி பெற்றால் இருவருக்கும் ஏற்படும் மகிழ்ச்சி சந்தோஷம் இடையில் ஏற்படும் பிணக்கு குறித்து நன்கு ஆய்வு செய்து திரைப்படத்தினை பா ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார்.

rajnith
rajnith

மேலும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனை அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள் போன்றவற்றை மிகவும் விரிவாக தத்துரூபமாக காட்டியுள்ளார் அது மட்டும் இன்றி பையனும் பையனும், பொண்ணும் பொண்ணும் காதலிக்க கூடாதா என்ற கேள்வியும் இந்த படம் இந்த படத்தில் எழுப்பப்பட்டுள்ளது மொத்தத்தில் காதல் குறித்து ஒரு வித்தியாசமான பார்வையில் பா ரஞ்சித் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

dhanush-12

ராசி கண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு தனது மகனின் கையை விட்ட தனுஷ்.! வைரலாகும் வீடியோ..

தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதியான நேற்று தமிழகத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் தங்களுடைய நல்ல விமர்சனத்தை தந்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தினை மித்ரன் ஜாக்பவர் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருந்தது. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்தியா மேனன்,பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். மேலும் தனுஷின் தாத்தாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, அப்பாவாக பிரகாஷ்ராஜ் ஆகியோர்கள் நடித்திருந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ரீச்சாகி உள்ளது. தொடர்ந்து பாசிட்டி கமெண்டுகளை இத்திரைப்படம் பெற்று வருவதால் பட குழுவினர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள் தனுஷ் நடிப்பில் சமீப காலங்களாக வெளியாகி வரும் கர்ணன், ஜகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் வெளியாகி நிலையில் சுமார் 1 வருடத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம் திரைப்படம் திருட்டுகளில் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் அதி காலை முதலில் இந்த திரைப்படத்தின் பார்ப்பதற்காக புக் செய்து வருகிறார்கள் அனைத்து திரை அரங்குகளும் புல்லாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் தன்னுடைய மகன், அனிருத் நடிகை ராஷிக் அண்ணா மற்றும் படக்குழுவினர்களுடன் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்குகளில் முதல் காட்சி பார்ப்பதற்காக காலை 8 மணிக்கு சென்றுள்ளார்கள்.

dhanush
dhanush

தனுஷ் திரையரங்கிற்கு வருகிறார் என்பது அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் குவிந்தார்கள் திரைப்படம் முடிந்த பிறகு காரில் ஏறி செல்ல கூட வழியில்லாததால் தனுஷ் தன்னுடைய பாதுகாப்பாளர்களுடன் நடிகை ராதிகா கைகளைப் பிடித்துக் கொண்டு மிகவும் வேகமாக ரசிகர்களின் கூட்டத்திலிருந்து தப்பித்து காரில் செல்லும் காட்சிகளின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் நடிகையின் கையை பிடித்துக் கொண்டு செல்லும் தனுஷ் தன்னுடன் படம் பார்க்க வந்த மகனை மறந்து விட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

saanti

கோவை பள்ளி மாணவர்களுடன் விக்ரம் பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட இயக்குனர் சாண்டி.! வைரலாகும் வீடியோ..

நடன இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர் தான் நடன இயக்குனர் சாண்டி. இவருடைய நடிப்பு திறமை ரசிகர்களால் கவரப்பட்ட நிலையில் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது மேலும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும நடுவராக பணியாற்றி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க கமலஹாசன் உடன் இணைந்து விஜய் சேதுபதி,பகத் பாசில் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் அனிருத் இன் இசையமைக்க உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இத்திரைப்படத்தினை வெளியிட்டது.

இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மரண மாஸ் குத்து பாடல் தான் ‘பத்து தல’ இந்த பாடலில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமலஹாசன் தன்னுடைய குரலில் பாடி நடனமாடி இருந்தார்.

மேலும் பெரிதாக நடனமாடவில்லை என்றாலும் தன்னுடைய சிம்பிளான ஸ்டெப்பால் மிகப்பெரிய ப்ரீச்சை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கோயம்புத்தூர் சாவோதயா பள்ளியில் காம்ப்ளக்ஸ் கூட்டமைப்பின் 43வது ஆண்டு பள்ளிக்கான நடனப் போட்டிகள் கோவையில் உள்ள இடையர்பாளையம் என்ற இடத்தில் உள்ள பெங்க்லன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனர் சாண்டி கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுடன் இணைந்து நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். இது குறித்து செய்தி வாசிப்பாளர்களிடம் பேசிய இவர் சமூக வலைதளங்கள் நல்ல அப்டேட்டாக இருந்தால் கலைத்திறமைகள் இருக்கும் யார் வேண்டுமானாலும் எளிதாக தங்களை திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வர முடிவதாக கூறினார்.

நடன கலைகளை அனைவரும் ஊக்குவிப்பதாகவும் பள்ளிகளில் இதற்கு தனியான வகுப்புகள் நடப்பதாகவும் கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில்  இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தியேட்டரில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தினை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த தனுஷ் மற்றும் அனிருத்.! வைரலாகும் வீடியோ..

தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் பல வருடங்கள் கழித்து தற்பொழுது திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதாவது தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மித்ரன் ஜகவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆன இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. காலை 8 மணி முதல் காட்சி திரையரங்குகளில் திரையிடப்பட்டது. எனவே நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இவர்கள் வருவதை தெரிந்து கொண்டு ரசிகர்கள் விசில் சத்தம் என ஆரவாரம் கைத்தட்டலோடு அனைவரும் பார்த்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து ரசிகர்களுடன் பார்த்து மகிழவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தத் திரைப்படத்தினை தமிழக உரிமத்தை ரேட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைப்பற்றியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் படித்தோம் வேலை கிடைக்காத இளைஞன் பல வேலைகளை தேடியும் கிடைக்காத காரணத்தினால் டெலிவரி பாய் வேலையை செய்து வருகிறார். அவ்வப்பொழுது டெலிவரி பாயாக நடித்து வரும் தனுஷ் நித்யா மேனனை சந்திக்க இருவரும் நண்பர்களாகி விடுகிறார்கள்.

இவரைத் தொடர்ந்து தனுஷின் தாத்தாவாக முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், அப்பாவாக பிரகாஷ்ராஜ் அவர்களும் நடித்துள்ளார்கள். தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்தியா மேனன், ராசி கண்ணா‌ ஆகியோர்கள் நடித்துள்ளனர். இவ்வாறு இவர்களுடைய கூட்டணி மிகவும் அருமையாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

dhanush
dhanush

மேலும் இவர்களுடைய அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது இதனை தொடர்ந்து அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அனைத்து பாடல்களும் வெளியாகி முன்பே சூப்பர் ஹிட்டானது இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

rajini kandh 1

முதலும், கடைசியுமாக ரஜினிகாந்த் நடித்த விளம்பரம் இதுதான்.! வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் 47 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் பெற்ற வந்த நிலையில் சமீப காலங்களாக கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வயதான காரணத்தினால் இவருக்கு சுறுசுறுப்பு இல்லை ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதனால் ரஜினி மார்க்கெட் குறைந்த இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் ரசிகர்கள் மத்தியில் இதற்கு தற்பொழுது வரையிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முறையாக நெல்சன் திலிப் குமாருடன் இணைந்து தனது 169 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.இந்தத் திரைப்படத்தில் தமன்னா,ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் என பலரும் இணைந்து நடிக்கிறார்கள். எனவே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.இவ்வாறு மிகவும் பிசியாக முன்னணி நடிகராக கலக்கி வரும் இவர் விளம்பரங்களில் நடித்ததில்லை என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் ரஜினிகாந்த் சினிமாவில் தன்னுடைய இளம் வயதில் பிரபலமடைந்த நேரத்தில் ஒரே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

ஆம், அதாவது ரஜினிகாந்த் கோக் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் இதுதான் ரஜினிகாந்தின் முதலும் கடைசியமான விளம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது பல வருடங்கள் கழித்து இவர் நடித்துள்ள விளம்பரத்தின் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

ROSHNI HARIPIRIYAN

அதிதி சங்கருக்கு டப் கொடுக்கும் ரோஷ்னி ஹரிப்பிரியன்.! வைரலாகும் வீடியோ..

விஜய் தொலைக்காட்சிகள் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகம்தான் பாரதி கண்ணம்மா அந்த நாடகத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவை ஆகும், கதாபாத்திரங்கள் மட்டுமல்ல அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகளும் ஆவர்.

பாரதி கண்ணம்மா நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமாக விளங்குவது கண்ணமா ஆகும், இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், இந்த நாடகத்திற்கு முன்பு இவர் எள்ளளவு கூட தமிழ்நாட்டு மக்களால் அறியப்படாதவர் ஆவார். இந்த நாடகத்தில் வாய்ப்பு கிடைத்த பிறகு தன்னுடைய முழு திறமையும் வெளிப்படுத்தி தன்னை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு நீங்காத இடத்தையும் பிடித்துள்ளார்.

மேலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, இந்த நாடகத்தில் வந்த ஒரு சில காட்சிகளை வைத்து இந்த நாடகத்தை மீம் கிரியேட்டர்கள் ஒரு காலத்தில் வச்சி செய்தார்கள்‌. மக்கள் இந்த நாடகம் எப்பொழுது முடியும் என்ன முடிவு என்ற ஆர்வத்துடன், இந்த நாடகம் முடியாது போல என்று பெருமூச்சு விடுகின்றனர்.

1992ஆம் ஆண்டு பிறந்த இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஹியூமன் பயாலஜி என்ற பட்டப்படிப்பை முடித்துள்ளார், இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினால் அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் ரோஷ்னி ஹரிபிரியனும் தற்பொழுது தாவணி பாவாடையில் மிக அழகாக நடனமாட வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

VIJAY

ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த நடிகர் விஜய்.! வைரலாகும் வீடியோ..

தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வரும் நாயகன் தான் தளபதி விஜய் மேலும் இவரை வசூல் சக்கரவர்த்தி என்றும் அழைத்து வருகிறார்கள். ஏனென்றால் இவர் திரைப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பற்றி வருகிறது இதன் காரணமாக தமிழ் திரைவுலகின் வசூல் சக்கரவர்த்தி என பலராலும் கூறப்பட்டு வரப்படுகிறது இப்படிப்பட்ட நிலை இவரின் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தது.

அந்த வகையில் வசூல் திரைப்படத்தின் வெற்றினை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை எதிர்த்து மாஸ்டர் படத்திலிருந்து பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது முன்னதாக வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இத்திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த வருகிறார் இவரை தொடர்ந்து பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா கிரிஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து கார்த்தி பழனி ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்யும் வாட்சி திரைப்படத்திற்கு தமன்.எஸ் இசையமைக்கிறார். இவ்வாறு தற்பொழுது நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்று உள்ளார். ஹைதராபாத்தில் மகேஷ்பாபுவின் திரையரங்குகளில் படம் பார்ப்பதற்காக வெளியில் வந்துள்ளார். அந்த வகையில் படம் பார்த்து முடித்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ajith

இதுவரையிலும் யாரும் பார்த்திராத செருப்பு விளம்பரத்தில் நடித்திருக்கும் நடிகர் அஜித்.! வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் அஜீத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். தற்பொழுது இவர் தனது 61-வது திரைப்படத்தில் H.வினோத் இயக்கத்தில் நடித்திருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை தொடர்ந்து இப்படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இவ்வாறு இவர்களின் கூட்டணியில் முதன்முறையாக மேற்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது அதன் பிறகு வலிமை இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர்களின் கூட்டணியில் அஜித்தின் 61வது திரைப்படம் உருவாகி வருகிறது  இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய விடாமுயற்சியினால் சினிமாவில் வளர்ந்துள்ள நடிகர்களின் அஜித்தும் ஒருவர். பொதுவாக ஒரு நடிகர் சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்றால் மிகவும் தனது கடின உழைப்பை செலுத்த வேண்டும் அந்த வகையில் அஜித்தும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டங்களில் இவருடைய படங்கள் பெரிதும் தோல்வியை அடைந்து வந்தது.

பிறகு இவருடைய விடாமுயற்சியினால் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்தார் தற்பொழுது இவர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடிக்க இல்லை என்றாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இவரும் சாதாரண ஒரு நடிகர் தான். அதன் பிறகு இவர் எப்போது சினிமாவில் வளர ஆரம்பித்தாரோ அதிலிருந்து பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலைகள் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் செருப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், அதாவது நடிகர் அஜித் ஹவாய் செருப்பு விளம்பரத்தில் அஜித் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. தற்போது அவர் நடித்துள்ள செருப்பு விளம்பரத்தின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக இது அஜித்தா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

movie

அந்த பயம் தான் 300 வருஷம் நாம விதைச்சது வைரலாகும் கௌதம் கார்த்தியின் ஆகஸ்ட் 16 1947 டீசர்.!

தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவரும் நிலையில் கடைசியாக யுத்தம் என்ற திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தினை தொடர்ந்து திரைப்படத்தினை இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தினை ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் தற்பொழுது பத்து தலை திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வித்தியாசமான பீரியட் திரைப்படமாக தயாரிக்கியுள்ள திரைப்படம் தான் ஆகஸ்ட் 16 1947 இந்த திரைப்படத்தினை ஏ ஆர் முருகதாஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ப்ரொடக்ஷன்ஸ், PURPLE BULL என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்து வரும் திரைப்படத்தினை இயக்குனர் என் எஸ் பொவன்குமார் எழுதி இயக்கிவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து ரேவதி ஷர்மா கதாநாயக நடித்து வருகிறார் இவர்களைத் தொடர்ந்து விஜய் டிவியின் புகழ் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ் கே ஒளிப்பதிவு செய்யும் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

kolai movie

அடுத்தடுத்த மர்மமான கொலைகள் விஜய் ஆண்டனி மிரட்டும் கொலை ட்ரைலர்.!

பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி.இவர் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்தார் அதன் பிறகு தனது சிறந்த நடிப்பு திரைப்படத்தின் மூலம் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்தார்.

மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதோடு தொடர்ந்து அடுத்தடுத்து வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வருவதால் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் என அடுத்தடுத்து திரைப்படங்களை வரிசையாக விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீசாக காத்திருக்கிறது.ஒளிப்பதிவாளர் இயக்குனர் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் தமிழ் பட இயக்குனர் C.S. அமுதன் இயக்கத்தில் ரத்தம் ஆகிய திரைப்படங்களில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கிறது.

மேலும் கிரைம் ஸ்பெஷல் திரில்லர் திரைப்படமாக இயக்குனர் பாலாஜி கே குமார் இயக்கத்தில் தயாராகி உள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.கொலை திரைப்படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சௌவுத்ரி, முரளி ஷர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

கொலை திரைப்படத்தினை பிலிம்ஸ் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவில் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார் இந்நிலையில் கொலை திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.