கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனா.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய “ஜோவிகா” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சி பிக்பாஸ்.. சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது அதன்படி பிக்பாஸ் சீசன் 7 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பாவா செல்லதுரை மட்டும் உடல்நல குறைவு காரணமாக வெளியேறினார் மற்ற போட்டியாளர்கள் யார் சரியாக விளையாடாமல் இருந்தார்களோ அவர்கள் எலிமினேஷன் ரவுண்டில் சிக்கி மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுக்களை வாங்கி ஒவ்வொருவராக வெளியேறிய வண்ணமே இருக்கின்றனர் கானா பாலா, அக்ஷயா, பிராவோ ஆகியவர்களை..

அரசியலுக்கு ஏன் வந்தீங்க… மாணவியின் கேள்விக்கு கேப்டன் கொடுத்த பதில்.. அரங்கமே கை தட்டிய சம்பவம்

தொடர்ந்து கடந்த வாரம் நாமினேஷனில் தினேஷ், விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், விசித்ரா, அனன்யா ராவ், ஜோவிகா  போன்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி இருந்த நிலையில் நேற்று குறைந்த ஓட்டுகளை வாங்கி ஜோவிகா வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து கமலுடன் பேசினார்.

அவர் சொன்னது என்னவென்றால் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கனவு வந்தது அப்பொழுதே நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது போல இருந்தது அது தற்பொழுது நிகழ்ந்துள்ளது என கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். அதுபோல நான் பள்ளி ஹாஸ்டலில் இருந்த பொழுது என் அம்மா வரப்போகிறார் என்றால் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கனவு போல வந்துவிடும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல பேர் இருக்கும் இடத்தில் ஒரு குள்ளநரி இருக்கும். விஜயகாந்தை பணம் எடுக்கும் மெஷினாக பார்த்த பிரேமலதா.. வெளிவந்த தகவல்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜோவிகா 60 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் பயணித்துள்ளார் இவர் இதுவரை வாங்கிய சம்பளம் குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் ஜோவிகா  ஒரு வாரத்திற்கு 2 லட்சம் சம்பளம் என பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.