யாரு செட்டிங்கா.. விசித்ரா, அர்ச்சனாவின் அதிரடி முடிவு.! கரார் காட்டும் கேப்டன் தினேஷ்

Bigg Boss season 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா விசித்ராவின் திடீர் முடிவு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. வைல்ட் கார்டில் ஐந்து பேர் என்ட்ரி கொடுத்ததில் இருந்து எதிர்பாராத ட்விஸ்டுகள் இருந்து வருகிறது. அப்படி முக்கியமாக கடந்த வாரம் அர்ச்சனா விசித்ராவை டார்கெட் செய்து ஏஜென்ட் டீம் செய்த வேலைகளை கமல் கண்டித்தார்.

எனவே இந்த பிரச்சனை இதற்கு மேல் தொடராது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூனியக்காரி மாயா பூர்ணிமா இருவரும் விஷத்தை கக்குவது போல் தொடர்ந்து இவர்களை டார்கெட் செய்து வருகின்றனர். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் பெண் போட்டியாளர்கள் போல் ஆண்களும், ஆண் போட்டியாளர்கள் போல் பெண்கள் கேரக்டர் மாறி சுவாரசியமாக விளையாடி வந்தனர்.

லியோவை விட கொடூரமான கெட்டப்பில் சாண்டி மாஸ்டர்.. போஸ்டருக்கு குவியும் கமெண்ட்கள்

இதில் மணிக்கு கோல்ட் ஸ்டார் கொடுக்கப்பட்டது. இவ்வாறு சுவாரசியமாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது விசித்ரா அர்ச்சனாவின் முடிவு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. கமல்ஹாசனின் அறிவுரைக்குப் பிறகு அர்ச்சனா, விசித்ரா இருவருமே எந்த ஒரு சண்டை சச்சரவுக்கும் போகாமல் இருந்து வந்தனர்.

ஆனால் வேண்டுமென்ற ஹவுஸ் மேட்ஸ்கள் இவர்களை டார்கெட் செய்து வருகின்றனர். அதாவது இந்த வாரம் போரிங் கண்டஸ்டண்ட் ரெண்டு பேரை தேர்ந்தெடுத்து கூறுமாறு பிக் பாஸ் சொல்ல அனைவரும் விசித்ரா, அர்ச்சனா என்று சொல்கின்றனர். இவர்கள் இருவரும் தான் இந்த வாரம் ஜெயிலுக்கு அனுப்பப்பட வேண்டும்.

சங்கீதாவிற்கு முன் விஜய்க்கு பார்க்கப்பட்ட பெண் இவரா.? தளபதியின் ஆசையால் தம்பி மகளை தூக்கி எறிந்த ஷோபனா

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் மணியிடம் விசித்ரா என்னடா இப்படி முதுகுல குத்திட்டிங்க என்று சொல்ல அர்ச்சனாவும் முதுகுல குத்திட்டீங்க என்று சொல்கிறார். இதற்கு வெளியில் இருக்கும் பூர்ணிமா பிக் பாஸ் சீக்கிரமா அவங்கள ஜெயிலுக்கு அனுப்புங்க என்று சொல்கிறார்.

இந்நிலையில் விசித்ரா, அர்ச்சனா இரண்டு பேரும் வெளியில் உட்கார்ந்து கொண்டு கேப்டன் தினேஷிடம் நாங்க வஸ்டு ஃபர்பாமெர்ஸ் என்பதை ஏத்துக்க முடியல அதனால் நாங்கள் ஜெயிலுக்கு போக முடியாது என்று கூறுகின்றனர். தினேஷ் மற்ற ஹவுஸ் மேட்ஸ்களை அழைத்து அவங்க சாப்பிடுறாங்க சாப்பிடல ஓரமா வைக்கிறாங்க அத பத்தி எனக்கு கவலை இல்லை.

ஆறக்கடக்கிற வரைக்கும் அண்ணன்னு சொல்லுவீங்க.! ஆற கடந்தா யாருன்னு கேப்பிங்க.. 5 நடிகர்களை அடக்கி வைத்த வடிவேலு..!

ஆனா அவங்க உள்ள வரக்கூடாது நான் ஸ்மால் ஹவுஸ்க்குள்ள அவங்களை விட போறது இல்ல அங்கு இருந்து எழுந்திருச்சா நேரா ஜெயிலுக்குதான் என்று சொல்ல ஆனால் தினேஷிடம் படுக்குவதற்கு தேவையான பெட் சீட்டுகளை எடுத்துக்கொண்டு கார்டனில் படுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ப்ரோமோவின் முடிவில் யாரு செட்டிங்கா என்று ரஜினியின் வசனம் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.