டாஸ்க்கில் தோற்றதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படும் மூன்று பேர்.! இவர்களுக்கு பதிலாக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்கள்.. பரபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss season 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்படி சமீப காலங்களாக விசித்ரா, அர்ச்சனா மற்றும் தினேஷ் மூன்று பேருக்கும் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

எனவே இவர்கள் மூவரில் ஒருவர் டைட்டில் வின்னர் ஆவர் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எதிர் இருந்து வருகிறது. அதாவது மாயா, பூர்ணிமாவின் ஏஜென்ட் டீம் செய்யும் வேலைகள் மக்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி வருவதனால் இவர்களால் டார்கெட் செய்யப்பட்டு பிரபலமானவர்கள் தான் அர்ச்சனா, விசித்ரா.

அவசர அவசரமாக பாக்கியவை அழைத்துக் கொண்டு போகும் பழனிசாமி.. இதைப் பார்த்து டென்ஷன் ஆகும் கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

தொடர்ந்து இவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து வந்ததால் ஏஜென்ட் டீமே பிரிந்துள்ளது. முக்கியமாக மாயாவும் பூர்ணிமாவும் பல விமர்சனங்களுக்கு பிறகு அமைதியாக இருக்க ஆரம்பித்துள்ளனர். மனமுடைந்த பூர்ணிமா குழப்பத்தில் இருந்து வருகிறார். மறுபுறம் அர்ச்சனா, விசித்ரா விதி மீறல்கள் செய்ததால் இதனையும் கமல்ஹாசன் கண்டித்தார்.

இவர்களுக்கு இடையே பல சண்டை சச்சரவுகள் இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் மூன்று பேர் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் இருந்து வரும் நிலையில் இன்றைய ப்ரோமோவில் இவர்களுக்கிடையே புதிய டாஸ் நடைபெறுகிறது.

இந்தியா படுதோல்வி.. ரஜினியின் வாய் முகூர்த்தம் – வம்பு இழுக்கும் சினிமா பிரபலம்.!

அதில் தோல்வியடையும் மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் இவர்களுக்கு பதிலாக புதிதாக மூன்று போட்டியாளர்கள் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுக்க உள்ளனர். எனவே இதனால் டாஸ்க்குகள் நடைபெற அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் பயத்தின் உச்சத்தில் உள்ளார்கள்.