அவசர அவசரமாக பாக்கியவை அழைத்துக் கொண்டு போகும் பழனிசாமி.. இதைப் பார்த்து டென்ஷன் ஆகும் கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode november 20 : இன்றைய எபிசோடில் கோபி, ராதிகா, ஈஸ்வரி மூன்று பேரும் ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரியும் கோபியும் பேசிக் கொண்டு இருக்கின்றன அப்பொழுது ராதிகா இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி தூங்குறது பாக்யா பிரச்சனையை அவங்க பார்த்துப்பாங்க நீங்க பேசாம தூங்குங்க கோபி..

உங்க பிசினஸ்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கு அதெல்லாம் பாக்காம பாக்கியா விஷயத்தை பெருசா பேசுறீங்க பேசாம தூங்குங்க என்று சொல்ல எல்லோரும் தூங்குகின்றனர்.. அடுத்து பாக்யா இனியா கிட்ட நீ காலேஜ் முடிகிறதுக்குள்ள நான் பெரிய தொழிலதிபர் ஆகி நிறைய கார் வாங்கி..

இந்தியா படுதோல்வி.. ரஜினியின் வாய் முகூர்த்தம் – வம்பு இழுக்கும் சினிமா பிரபலம்.!

நானே கார் டிரைவ் பண்ணி உன்னை காலேஜ்ல கொண்டு வந்து விடுவேன் என்று சொல்ல இனியா இதெல்லாம் நடக்கும்மா என சொல்கிறார் அடுத்த நாள் காலையில் பாக்யா செழியனுக்கு காபி போட்டு எடுத்துட்டு போய் பார்க்கிறார். அப்பொழுது செழியன் நான் தப்பு பண்ணது உண்மைதான்.

அதை நான் நியாயப்படுத்த விரும்பல ஆனா இப்ப ஜெனி இல்லாதது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இனிமே நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன் அவ கிட்ட பேச எவ்வளவோ ட்ரை பண்ண, பேச மாட்டேங்குறா நீ கூட என்கிட்ட பேசல இல்ல சரியா என்று சொல்ல நீ பண்ண தப்ப உணர்ந்துட்ட, ஆனா நீ பண்ண தப்பால ஜெனிதான் கஷ்டப்படுறா கொஞ்ச நாள் அவள தொந்தரவு பண்ணாம இரு ஒரு நாள் உன்னை புரிஞ்சுகிட்டு வருவா என்று பாக்யா செழியனுக்கு ஆறுதல் சொல்கிறார்.

சொந்த மகனுக்கே உதவி பண்ண யோசிக்கும் விஜயா.. விட்டுக் கொடுக்காத அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

அடுத்து ஈஸ்வரி பாக்யாவிடம் தனக்கு காபி போட சொல்கிறார் கூடவே கோபியும் அங்கே உட்கார்ந்து இருக்கிறான் அவனுக்கும் சேர்த்து போடு என்று சொல்ல பாக்கியா அவர பார்த்துக்க தான் ராதிகா இருக்காங்க இல்ல என்கிட்ட ஏன் வந்து காபி கேக்குறீங்க என கேட்பதற்கு அவ காலையிலேயே எழுந்து வாக்கிங் போறேன்னு போனா இன்னும் வரவே இல்ல..

உன்ன மாதிரியே அவளும் கோபியை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேங்குறா, நீ போட்டு குடு என்று சொல்ல பிறகு பாக்கியா ஈஸ்வரி, ராமமூர்த்தி, கோபி மூன்று பேருக்கும் காபி கொடுக்கிறார். அப்பொழுது ராதிகாவும் உள்ளே வர ஈஸ்வரி என் பையன் காலையில் எழுந்த உடனே காபி குடிப்பான் நீதான் எங்கேயோ போயிட்ட, நீ அவனுக்கு காபி போட்டு தரல..

அதனால தான் நான் பாக்யா கிட்ட சொல்லி போட சொன்னேன் என்று சொல்ல எனக்கும் தான் காலைல எழுந்த உடனே காபி குடிக்கணும்னு தோணும் என ராதிகா சொல்வதும் உடனே பாக்கியா எழிலுக்காக காபி போட்ட அவன் வீட்ல இல்ல நீங்க வேணும்னா குடிக்கலாம் என்று காஃபியை நீட்டுவதற்கு ராதிகா வாங்கி காபி கொடுக்கிறார், இதை பார்த்து ஈஸ்வரையும் கோபியும் ஷாக் ஆகின்றனர்.. அடுத்து பழனிச்சாமி வீட்டிற்கு வந்து பாக்யாவிடம்..

ஒரு இடத்துக்கு போனும் சீக்கிரம் வாங்க என்று கூப்பிட பாக்கியா எங்கே என கேட்கிறார். ஆனால் பழனிச்சாமி அதை சொல்லலாம் எனக்கு நேரம் இல்லை வாங்க என்று சொல்வதும் ராமமூர்த்தியும் போயிட்டு வாம்மா என சொல்கிறார் இதை பார்த்து கோபி என்ன அவன் கூப்பிடுறதும் இவளும் போரா என முழிக்கிறார் இதோடு இந்த எபிசோடு முடிந்துள்ளது