வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் மூன்று போட்டியாளர்கள் இவர்கள்தான்.! பரபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி..

Bigg Boss 7 Tamil today: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுப்பதாக ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில் யார் அந்த போட்டியாளர்கள் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு மாத காலங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

தியேட்டரில் பேய் ஓட்டம் ஓடும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

தற்போது வரையிலும் இருந்த சீசன்களை விட பிக் பாஸ் சீசன் 7 மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்டு பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அர்ச்சனா, தினேஷ் மற்றும் விசித்ரா இவர்கள் மூவருக்கும் மக்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்து வருகிறது. எனவே இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ஏஜென்ட் டீம் செய்த வேலையினால் இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசுஉருவாகி இருக்கும் நிலையில் இதனை அடுத்து தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே மூன்று டாஸ்க்கள் புதிதாக நடைபெற இருப்பதாகவும் அதில் தோற்கும் ஒன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அதற்கு பதிலாக மூன்று போட்டியாளர்கள் புதிதாக வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

பொன்னம்பலம் அடித்த அடியில் பத்தடி தாண்டி விழுந்த விஜயகாந்த்.. சுத்து போட்ட ரசிகர்கள் – அட இப்படியெல்லாம் நடந்திருக்கா

எனவே இதனால் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 50 நாட்களை கடந்து இருப்பதால் இந்த வைல்ட் கார்டில் ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு அடுத்தடுத்து வெளியேறிய அனன்யா ராவ், விஜய் வர்மா மற்றும் வினுஷா தேவி ஆகியோர்கள் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது இனிவரும் ப்ரோமோக்களில் தெரிய வரும்.