ஒரே நேரத்தில் இருவருக்கு காதல் வலையை வீசிய சூனியக்காரி.! தினேஷை பழி வாங்க தான் இந்த நார வேலையா..

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 கன்டெண்டுக்காகவே காதல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய நாளிலிருந்து சில போட்டியாளர்கள் கன்டெண்டுக்காக தான் இதை செய்கிறோம் எனக்கூறி பல வேலைகளை பார்த்து வந்தனர்.

எனவே இந்த சீசனிலும் கிடைக்காத கன்டெண்டுகள் சீசன் 7 கிடைத்து வருகிறது. அப்படி சூனியக்காரி மாயாவுடன் சுற்றி வரும் சின்ன சூனியக்காரி பூர்ணிமா இரண்டு பேரை தனது காதல் வளையல் சிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். அதாவது சீசன் 7ல் மிகவும் போர் கண்டஸ்டண்டாக கருதப்படும் விக்ரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் முளைத்த அடுத்த காதல்.. மாயாவுக்கு ஆப்பு வைத்த பூர்ணிமா.! ஒருவேளை இதுவும் கண்டென்டா?

பிக் பாஸ் கூட விக்ரமை டோர் சாத்துவதற்கு தான் பயன்படுத்தி வருகிறார். எனவே வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் விக்ரம் போர் கண்டஸ்டண்ட் என்பது தெரிகிறது ஆனால் பூர்ணிமா விக்ரமுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். மேலும் சில முறை காதலிப்பது போல மிகவும் அன்பாக பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது விஷ்ணுவிடம் நேரடியாக தனது காதலை கூறியுள்ளார் பூர்ணிமா. இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் விஷ்ணுவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தனது காதலை கூறி பதில் சொல்லுமாறு கேட்பதை பார்த்தோம். இவ்வாறு விக்ரம் விஷ்ணு இருவரிடமும் நெருக்கமாக பழகி வரும் நிலையில் தினேஷை பழி வாங்குவதற்காக தான் இவ்வாறு செய்கிறாரோ என்பதும் தோன்றுகிறது.

எஸ் ஜே சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த தினேஷ் தொடர்ந்து தனது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறார். இவரை சுத்தமாக பூர்ணிமாவிற்கு பிடிக்கவில்லை எனவே வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தினேஷை டார்கெட் செய்து பேசி கொண்டிருக்கிறார்.

அப்படி நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் தினேஷ் மற்றும் விஷ்ணுவிற்கு இடையே பிரச்சனை உருவானது எனவே இதனால் விஷ்ணுவை தனது காதல் வலையில் சிக்க வைத்தால் தினேஷை டார்கெட் செய்து சண்டை போடலாம் என்ற கன்டெண்டுக்காக இவ்வாறு செய்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.