பணப்பெட்டியை தூக்கி சென்ற டைட்டிலுக்கு தகுதியான வெற்றி போட்டியாளர்.. ஏமாற்றத்தில் மக்கள்..

Bigg Boss 7: பிக் பாஸ் சீசன் 7 இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. கடைசியாக ரவீனா மற்றும் நிக்சன் டபுள் எவிக்சன் கடந்த வாரம் நடைப்பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது வீட்டிற்குள் 8 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இதில் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

டிக்கெட் டூ ஃபின்னாலே டாஸ்க்கில் வென்ற விஷ்ணு மட்டும் நாமினேஷனில் சிக்கவில்லை. இதனை அடுத்து ஒவ்வொரு வரவும் எதிர்பாராத டாஸ்க்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் பணப்பெட்டியை வைக்கப்பட்டுள்ளது. முந்தைய சீசன்களை  விட இந்த சீசனின்  டைட்டில் வின்னர் யார் என்பதை சரியாக கணிக்க முடியவில்லை ஒரு வாரத்தில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கப் போட்டியாளர் அடுத்த வாரம் தங்களது பெயரை எடுத்துக் கொள்கின்றனர்.

மீனாவுக்கு சொந்தமாக தொழில் ஆரம்பித்து கொடுத்த முத்து.. ஷாக்கான விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

அப்படி தற்பொழுது  பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி டைட்டில் வின்னருக்கு தகுதியானவர் இவர்தான் என்று எதிர்பார்க்கப்பட்டவர் தான் தற்பொழுது பணப்பெட்டியை எடுத்து சென்றுள்ளார். மாயா தான் பணப்பெட்டியை எடுத்து வெளியே சென்றுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது ஆனால் உண்மையாக பணப்பெட்டியை எடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பவர் விசித்ரா தான்.

12 லட்சம் பண மதிப்பு வந்தவுடன் விசித்ரா இந்த முடிவை எடுத்திருக்கிறார். குறிப்பிட்ட வயதை தாண்டியிருக்கும் வயதானவர்கள் இதுவரையிலும் பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் நீடித்ததே கிடையாது ஆனால் முதன் முறையாக விசித்ரா சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து 90 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக பயணித்தார்.

கைவிட்ட விஜய் டிவி.. கை கொடுத்து தூக்கிய பிரபல தொலைக்காட்சி.. பாண்டியன் ஸ்டோர் சுஜாதா நடிக்கும் புதிய சீரியல்…

இவ்வாறு இவர் 12 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அர்ச்சனா, விஷ்ணு, மணி, தினேஷ் ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருக்க உள்ளனர். இதற்கு முன்பு மாயா, பூர்ணிமா, விஜய் வருமா மூவரில் ஒருவர் தான் இறுதி போட்டியாளர்.

மற்ற இருவர் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் கடந்த வாரமாக விசித்ரா பேசியது ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெகட்டிவாக அமைந்தது எனவே அவர் பணப்பெட்டியை எடுத்து கொண்டு கிளம்பியது நல்ல முடிவு தான்.