தரமான சம்பவம் செய்ய மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரதீப்.. இதோ அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bigg Boss Pradeep Antony: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதாக பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சூனியக்காரி மாயா பூர்ணிமாவின் ஏஜென்ட் டீம் திட்டம் போட்டு பிரதீப்பை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினர். பிரதீப் இருப்பதனால் இந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பயமாக இருக்கிறது என கமல்ஹாசனிடம் கூறி அனைவரும் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.

Vidaamuyarchi update : அதிரடி ஆக்சன், நோ எமோஷனல் மிரட்டும் இயக்குனர் மகிழ் திருமேனி

இவ்வாறு பிரதீப் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னருக்கு தகுதியானவர் என மக்கள் நினைத்து வந்த நிலையில் திடீரென்று ஏஜென்ட் டீம் இந்த வேலையை பார்த்ததால் கமல்ஹாசன் பிக் பாஸ் நடத்துபவர்களுக்கு எதிராக சோசியல் மீடியாவில் கண்டனம் தெரிவித்து வந்தனர். எதா இருந்தாலும் தீர விசாரித்த பிறகுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கமலுக்கும் அறிவுரை கூறி வந்தார்கள்.

இந்த வாரம் ரெட் கார்ட் கொடுத்து பூர்ணிமா மாயாவை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் பிரதீப் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பிரதீப் தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு சில கண்டிஷன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டு இருப்பதாவது, நீங்கள் எனக்கு ஒரு நல்ல ஆட்டத்தை கொடுத்தால் நான் உங்களுக்கு ஒரு சிறந்த காட்சியை கொடுப்பேன் என்று விஜய் டிவியை மற்றும் கமலஹாசன் டேக் செய்து அதில் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மச்சானுடன் மலேசியா பறந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா.! வைரல் புகைப்படம்..

ஒரு படத்தின் இடைவேளை முடிந்த பிறகு படத்தோட இரண்டாவது பாதியில் வரும் ரிவேஞ் மூடியில் தான் நான் இனி விளையாடுவேன் என்றும் அதுபோல இன்னொரு பதிவில் ரொம்ப ஷார்ப்பான புள்ளைகளால தான் அது முடியும் என்று நெருப்பு இமோஜை பதிவிட்டு நீங்கள் என்னை உள்ளே அனுப்ப நினைத்தால் எனக்கு எதிராக சதி செய்த இரண்டு போட்டியாளர்களை ரெட் கார்டு கொடுக்க வேண்டும் அதேபோல் நான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஏழாவது வார கேப்டனாக இருக்க விரும்புகிறேன் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.