அசிங்கப்பட்டும் திருந்தாத ரவீனா.. சொன்னதெல்லாம் பாழாப்போச்சு.! உன்னலா கள்ளிப்பால் ஊத்தி கொன்னுருக்க வேண்டும்..

Bigg Boss 7 Tamil today promo 1: 78 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. தற்பொழுது வரையிலும் பாவா செல்லதுரை, அனுஷா, யுகேந்திரன், அன்ன பாரதி, பிரதீப், ஐஷூ, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அனன்யா மற்றும் கூல் சுரேஷ் போன்ற போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

மீதமுள்ள அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, விஜய் வர்மா, மணி, ரவீனா, மாயா, சரவண விக்ரம், பூர்ணிமா, விஷ்ணு உள்ளிட்ட 10 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருவதனால் தொடர்ந்து போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் வந்து தங்களது பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி செல்கிறார்கள்.

சூர்யா மண் மிதித்ததை ராஜலட்சுமியிடம் போட்டு கொடுத்த சித்ரா தேவி.. வெடித்த புது பிரச்சனை – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அந்த வகையில் அர்ச்சனா, பூர்ணிமா, விஜய் வர்மா, விக்ரம் ஆகியோர்களின் பெற்றோர்கள் முதல் நாள் கலந்து கொண்டனர். அர்ச்சனாவை பிறந்தவுடன் கல்லி பாலை ஊற்றிக் கொன்றிருக்க வேண்டும் என நிக்சன் பேசியது மிகவும் தவறு என்பதை அர்ச்சனாவின் அப்பா உணர்த்தினார் கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

இவர்களைத் தொடர்ந்து நேற்று எபிசோடில் விஷ்ணு, நிக்சன், மணி, தினேஷ் ஆகியோர்களின் குடும்பத்தினர்கள் வந்தனர். இதில் விஷ்ணுவிடம் அவருடைய அக்கா எல்லாரிடமும் சமமாக இருக்க வேண்டும் மாயா, பூர்ணிமா இருவரையும் அறவே நெருங்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர். இவ்வாறு நேற்று ரவீனாவின் சித்தி ரெண்டு பேரும் தனியா உக்காந்து பேசுறதுக்கா ஷோவுக்கு வந்தீங்க இன்னொரு தடவை என் பொண்ண தனியா கூப்பிட்டு வைத்து பேசாதே என்று கடுமையாக எச்சரித்தார்.

மூன்று காமெடி பீஸ் நடிகர்கள் வில்லனாக நடித்த கதை தெரியுமா..

மேலும் இவர்கள் ரெட் கார்டு குறித்து பேசியதால் பிக் பாஸ் இருவரையும் உடனடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார். இதனை அடுத்து இன்றைய ப்ரோமோவில் உங்க அம்மா வந்து இருந்தாங்கன்னா இப்படி பேசி இருக்க மாட்டாங்க என மணி ரவீனாவிடம் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. ரவீனாவும் இதற்கு ஆமாம் ஆமாம் என கூறுகிறார் இவ்வாறு சித்தி இவ்வளவு எச்சரித்தும் இவர் பேசி இருப்பது ரசிகர்களை கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.