மூன்று காமெடி பீஸ் நடிகர்கள் வில்லனாக நடித்த கதை தெரியுமா..

Villain Role: தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருந்து வருகிறதோ அதேபோல அந்த படத்தில் நடிக்கும் வில்லனுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எனவே சமீப காலங்களாக ஏராளமான முன்னணி நடிகர்கள் வில்லனாக நடிக்க விருப்பப்பட்டு வருவதையும் பார்த்தோம்.

முக்கியமாக விஜய் சேதுபதி வில்லனாக நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. அதேபோல் நம்பியார் மற்றும் ரகுவரன் போன்றவர்களும் வில்லனாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். அப்படி ரகுவரன் நடிக்கும் திரைப்படங்களில் ஹீரோக்கள் அளவிற்கு இவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விரப்பாக இருந்த கதிரிடமிருந்து கண்ணீரை வரவழைத்த அவரின் மகள்.! தர்ஷினியை வேறொரு பையனுடன் இனைத்து வச்சு பேசும் குணசேகரன்..

அப்படி முக்கியமாக ரஜினி உடன் ரகுவரன் இணைந்து நடித்த பாட்ஷா படம் அனைத்து சீன்களும் ரசிகர்களை கைதட்ட வைத்தது. இவ்வாறு வில்லன் கதாபாத்திரங்களுக்கு இன்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காமெடியனாக ரசிகர்கள் மனதை கவர்ந்த மூன்று காமெடி நடிகர்கள் வில்லனாக ஒரு படத்தில் நடித்தது குறித்து பார்க்கலாம்.

ராஜேஷ் ஹீரோவாக நடித்த படம் தான் ‘சங்க நாகம்’ இந்த படத்தில் செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, நாகேஷ் போன்ற மூன்று பேரும் வில்லனாக நடித்திருந்தார்கள். சமீப பேட்டியில் செந்தில் கூறும் பொழுது வில்லனாக நான் அப்போவே இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறினார்.

முத்து – மீனாவை ஒரேடியாக வீட்டை விட்டு அனுப்ப பிளான் போடும் விஜயா.. யோசிக்கும் அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணியின் ஜோடி பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது காமெடி மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த செந்தில் தற்போது வரையிலும் சினிமாவில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இவ்வாறு எப்பொழுதுமே செந்தில் உடைய கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.