முத்து – மீனாவை ஒரேடியாக வீட்டை விட்டு அனுப்ப பிளான் போடும் விஜயா.. யோசிக்கும் அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

Siragadikka Aasai today episode december 22 : இன்றைய எபிசோடில் விஜயா பார்வதியிடம் வந்து ஸ்ருதியோட அம்மா 50 பவுன் நகை குடுத்தாங்க, அப்புறம் மீனா என்ன போட்டு வந்தாங்கன்னு கேட்டதுக்கு அவ ஒண்ணுமே போட்டு வரல அத தான் சொன்ன அதுக்கு மீனா கோபப்பட்டு தாலி செயின் கொடி எல்லாம் கழட்டி கொடுத்துட்டா என்று சொல்கிறார்.

பிறகு பார்வதி ஒரு பையன் இருந்தாலே பிரச்சனை, மூணு பசங்க மூன்று மருமகள் ஒரே வீட்ல இருந்தா பிரச்சனை வராமலா இருக்கும்,  ரவியும் ஸ்ருதி பேச்ச தான் கேட்கிறான் இப்படியே வீட்ல பிரச்சனை ஆகிட்டு இருந்தா ரவி அவங்க மாமியார் வீட்டுக்கு  போயிடுவான் அப்புறம் ரோகிணியும் மனோஜ கூட்டிட்டு மலேசியாவுக்கு போனாலும் போய்டுவா என்று சொல்ல..

கட்டின பொண்டாட்டிய பக்கத்திலேயே வச்சுக்கிட்டு செய்ற விஷயமா தமிழ்.! கண்ணீரில் மிதக்கும் சரஸ்வதி..

விஜயா இதுக்கெல்லாம் ஒரே முடிவு முத்து மீனாவ வீட்டை விட்டு அனுப்புவது தான் அவங்க இல்லன்னா தான் வீடு நல்லா இருக்கும் என்று சொல்கிறார்.. அடுத்து வீட்டில் கரண்ட் இல்லாததால் ஹீட்டர் போட முடியாது என விஜயா ஸ்ருதிக்கு சுடுதண்ணி வச்சு கொடு என்று மீனா விடம் சொல்கிறார். மீனாவும் தண்ணி வச்சு கொடுக்கிறார்.

பிறகு விஜயா மனோஜ்க்கும் சுடு தண்ணி வச்சு கொடு என்று சொல்ல அவருக்கெல்லாம் நான் செய்ய முடியாது அவர் பொண்டாட்டி செய்ய மாட்டாங்களா என்று கேட்கிறார் பிறகு முத்து அதானே மீனா ஏன் எல்லாருக்கும் வேலை செய்யணும் அவன் பொண்டாட்டி வச்சு தர மாட்டாங்களா என்று கேட்கிறார்.

தமிழிடம் ப்ரபோஸ் செய்த மேகனா.. அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் நமச்சி…

உடனே விஜயா வீட்ல இருக்குறவங்களுக்கு வேலை செஞ்சா என்ன குறைஞ்சு போயிடுற என்று மீனாவை திட்டுகிறார். அடுத்து முத்து மனோஜ்க்கு தெரியாமல் சுடுதண்ணியை கொண்டு போய் பாத்ரூமில் ஊற்றி வைத்து விட்டார். பிறகு மனோஜ் பச்ச தண்ணி என்று அந்த தண்ணியை ஊத்த சூட்டில் அம்மா என்று கத்திக் கொண்டு வெளியே வருகிறார்..

பிறகு முத்து நீ தான் சுடு தண்ணி கேட்டு இருந்தியே நான் தான் ஊத்தி வச்சேன் என்று சொல்ல ரோகிணியும் விஜயாவும் முத்துவிடம் ஏன் இப்படி பண்ண என்று சண்டை போடுகின்றனர்.. பிறகு முத்து மீனாவை யாராவது வேலை வாங்கினால் இனிமேல் இதுதான் நடக்கும் என்று எச்சரிக்கிறார்.

அடுத்த விஜயா அண்ணாமலையிடம் இந்த முத்துவும் மீனாவும் இருக்கிறதால டெய்லி ஏதாவது சண்டை வந்துட்டே இருக்கு, அதனால அவங்க ரெண்டு பேரும் தனி குடுத்தனம் வச்சிடலாம்  என்று சொல்கிறார் இதைக் கேட்டு அண்ணாமலையும் நீ உன்னோட முடிவை சொல்லிட்ட நான் யோசிக்கிறேன் என்று சொல்கிறேன் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது