உன் சித்து விளையாட்டெல்லாம் கமலோட வச்சுக்கோ.. மாயாவுக்கு குட்டு வைத்த விக்ரம் தந்தை

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் நிறைவடைய உள்ளது. முந்தைய சீசன்களை விட பல மாற்றங்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது ஆனால் சில வாரங்களாக கமல் பெரிதாக ஹவுஸ் மேட்ஸ்களை கேள்வி கேட்காததாலும், தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படாததனால் மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறுத்து வந்தனர்.

சூர்யா மண் மிதித்ததை ராஜலட்சுமியிடம் போட்டு கொடுத்த சித்ரா தேவி.. வெடித்த புது பிரச்சனை – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

ஏராளமானவர்கள் மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் கூறினார்கள். இந்நிலையில் ப்ரீஸ் டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சரவணன் விக்ரமின் அப்பா மாயாவை அவமானப்படுத்தினார். அதாவது 79வது நாள் அன்று சரவணன் விக்ரம், அர்ச்சனா, பூர்ணிமா, விஜய் வர்மா ஆகியோர்களின் பெற்றோர் வந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களது குழந்தைகளை பார்த்ததால் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

அந்த வகையில் சரவண விக்ரம் தந்தையுடன் அவரது அம்மாவும் வந்திருந்தார். அனைவரிடமும் கலகலப்பாக ஜாலியாக பேசினார் அப்பொழுது காமெடி கேட்டப்பில் இருந்த மாயாவும் அதில் கலந்து கொண்ட பொழுது விக்ரமின் தந்தை ‘நீங்க எல்லாம் வச்சி செய்றீங்களே அவன ஆள் இருக்கும்போதும் செய்கிறீர்கள் இல்லாத போதும் செய்கிறீர்கள்’ கிண்டல் அடித்தார்.

மூன்று காமெடி பீஸ் நடிகர்கள் வில்லனாக நடித்த கதை தெரியுமா..

பதிலுக்கு மாயா சொல்ல முயற்சிக்க ‘இதெல்லாம் கமல் சாரு ஏத்துக்குவாரு அவரிடம் சொல்லுங்கள் என்னிடம் வேண்டாம் நான் 24 மணி நேரமும் நிகழ்ச்சி பார்க்கிறேன்’ என மாயாவுக்கு பதிலடி கொடுத்தார். இவ்வாறு இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் பையன் செய்யாத வேலையை நீங்க நல்லா செஞ்சிட்டீங்க என பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் கமல் மாயா, பூர்ணிமாவிற்கு அதிகம் சப்போர்ட் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.