இன்று தொட முடியாத உயரத்தில் இருக்கும் ரஜினியின் முகத்தில் பிரபல இயக்குனர் காரி துப்பிய சம்பவம் தெரியுமா.!

Rajini and bharathiraja : சினிமாவைப் பொறுத்தவரை வாரிசு நடிகர்களுக்கும் அழகாக இருப்பவர்களுக்கும் மட்டும்தான் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது அந்த வகையில் நடிகர் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானதால் அவர்  சினிமாவில் மிக எளிதாக முன்னேறிவிட்டார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் உள்ளே நுழைந்தவர் ரஜினிகாந்த்.

இன்று என்னதான் உச்ச நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்து தான் இந்த இடத்தை அடைந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் பார்ப்பதற்கு அழகாக கூட இருக்க மாட்டார் ரஜினிகாந்த் ஆனால் இன்று ரஜினியுடன் நடிப்பதற்காக பல நடிகர் நடிகைகள் போட்டி போடுகிறார்கள்.

பதுங்கி பாயறது எல்லாம் வேலைக்கு ஆகாது.. சீறி பாய்ந்தால்தான் தலை தப்பும்..! விக்ரம் எடுத்த அதிரடி முடிவு.!

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 700 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல் வெளியானது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தை தயாரித்த சன் பிக்சர் நிறுவனம் ரஜினி, அனிருத், இயக்குனர் நெல்சன் என அனைவருக்கும் காரை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 170 வது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தான் இயக்கி வருகிறார். படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இந்த திரைப்படத்தின் மீதான எதிர் பார்ப்பது ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது அதற்கு காரணம் படத்தில் பல முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து அடுத்த லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து 171-வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் பல மடங்காக அதிகரித்துள்ளது. இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தாலும் ரஜினி  ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி முகத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பாரதிராஜா காரி துப்பிய சம்பவம் தற்பொழுது தெரியவந்துள்ளது.

தளபதி 68 -ல் விஜய்க்கு தங்கையாக நடிக்க 5 நடிகைகளுடன் ஆடிஷன் நடத்திய வெங்கட் பிரபு.. தேர்வான நடிகை யார் தெரியுமா.?

ரஜினிக்கு மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்டது 16 வயதினிலே இந்த திரைப்படத்தில் பரட்டை என்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரம் ஒட்டுமொத்த மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி ரஜினி முகத்தில் காரி துப்புவது போன்ற காட்சிகள் இருந்தது.

முதலில் ரஜினி முகத்தில் ஸ்ரீதேவி காரித்துப் போவது போல் காட்சிகளை எடுக்க வேண்டும் அதற்காக சோப்பு நுரையை ரஜினி முகத்தில் வீசி படமாக எடுத்தார்கள் ஆனால் பாரதிராஜா அந்த காட்சியை பார்த்துவிட்டு சரியாக வரவில்லை என மன வருத்தத்தில் இருந்தாராம் அவர் முகத்தை பார்த்ததும் ரஜினி கண்டுபிடித்து விட்டார் உடனே பாரதிராஜாவிடம் சென்று என்ன தலைவரே என கேட்டுள்ளார்.

அதற்கு பாரதிராஜா அந்த காட்சி எனக்கு பெரிதாக திருப்தியாக இல்லை என ரஜினியிடம் கூறியுள்ளார். உடனே எதையும் யோசிக்காமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நீங்கள் என் முகத்தில் காரி துப்புங்கள் என கூறியுள்ளார். ஆனால் பாரதிராஜா யோசித்தபடி நிற்க அவரை யோசிக்க விடாமல் தொடர்ந்து ரஜினி அவர்கள் என் முகத்தில் காரி துப்புங்கள் என வற்புறுத்தி கொண்டிருந்தாராம் உண்மையாலுமே பாரதிராஜா ரஜினி முகத்தில் எச்சிலை துப்பிவிட்டாராம் அப்படிதான் அந்த காட்சியை எடுத்தார்களாம் இப்படி பல அவமானங்களை கடந்து தான் இன்று சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.