சிம்ரனுக்கு முன்பு வாலி படத்தில் இவர்தான் நடிக்கவேண்டியது… பல வருடம் கழித்து வெளியான ரகசியம்

Vaalee Movie: வாலி படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்த நிலையில் முதலில் வேறு ஒரு நடிகை தான் நடிக்க இருந்துள்ளார் அதன் பிறகு தான் சிம்ரன் நடித்ததாக கூறப்படுகிறது. அஜித் நடிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமான படம் தான் வாலி. இப்படம் 1999ஆம் ஆண்டு முதன் முறையாக டபுள் ரோலில் அஜித் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ரொமான்டிக் திரில்லர் பானியில் உருவான இப்படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்தது ரசிகர்களை கவர்ந்தார். அவள் வருவாளா படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித்-சிம்ரன் கூட்டணியில் வாலி வெளியானது. இவர்களுடைய ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

நீ இல்லாத நேரத்தில் உன் நினைவுகளை தவிர வேறு எதுவும் இல்லை.. பிரபு, குஷ்பூ ஜோடியில் வெளியான 10 படங்கள்.!

முதலில் சிம்ரன் நடித்திருந்த கேரக்டரில் வேறு ஒரு நடிகையை தான் நடிக்க வைக்க எஸ்.ஜே சூர்யா முடிவு செய்துள்ளார். ஆனால் சில காரணங்களினால் சிம்ரன் இந்த படத்தில் நடித்தாராம். அதாவது முதலில் கீர்த்தி செட்டி தான் ஹீரோயினாக வாலி படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இவர் தேவதை, நினைவிருக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் வாலி படத்தில் இருந்து விலகி விட்டார் எனவே அஜித்திற்கு ஜோடியாக ரோஜா, மீனா ஆகியோர்களிடம் எஸ்.ஜே சூர்யா பேச்சு வார்த்தை நடத்த அப்பொழுது கால்ஷீட் பிரச்சனை இருந்ததால் வாலி படத்தில் நடிக்க மறுத்துள்ளனர்.

சினிமாவின் கவர்ச்சி வெடிகுண்டு.! அரேபிய குதிரை திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் இதுதான்

எனவே இதன் பிறகு தான் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா சிம்ரனை சந்தித்து கதை கூற சிம்ரனுக்கும் கதை பிடித்துப் போனதால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறு வாலி படத்தில் அந்த கேரக்டரில் சிம்ரன் தவிர வேறு எந்த நடிகையாவது நடித்திருந்தால் இந்த அளவிற்கு நன்றாக இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.