பூஜை போட்டு டிராப்பான பாலாவின் முதல் படம்.? சேது படம் உருவானது இப்படித்தான்.!

Director Bala : திரையுலகில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து நல்ல காசு பார்க்கவே ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் இயக்குனர் பாலா.. தான் எடுக்கும் படங்கள் விருதுகளை அள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கில் படங்களை எடுத்து வருகிறார்.

முதலில் விக்ரமை வைத்து “சேது” படத்தை எடுத்து அறிமுகமானார் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளை வாங்கி குவித்தது. படத்தில் விக்ரமுடன் இணைந்து சிவகுமார், அபிதா, ஸ்ரீமன், ஜோதி லட்சுமி, பாரதி விஸ்வநாதன்,  ராஜஸ்ரீ மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

வாய்ப்பு வாங்கி தருகிறேன்.. மகளையே பலருக்கு விருந்தாக்கிய தாய்.! உண்மை தெரிந்து என்ன செய்தார் தெரியுமா.?

அடுத்து பாலா  எடுத்த நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி, நாச்சியார், நான் கடவுள் போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்பொழுது அருண் விஜயை வைத்து “வணங்கான்” என்ற படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் திட்டமிட்டபடி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் பாலா பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது பாலா முதன்முதலில் எடுக்கவிருந்த  திரைப்படம் சேது கிடையாது அதற்கு முன்பாக பிரபல தயாரிப்புகளிடம் ஒரு கதையை கூறி அதற்கு அகிலன் டைட்டில் எல்லாம் வைத்து பூஜையை போட்டு இருக்கின்றனர் அதில் சிவக்குமார் கலந்து கொண்டார்.

அட நம்ம பானுவா இது.. இவருக்கு இவ்வளவு பெரிய மகளா.!

பிறகு தயாரிப்பாளருக்கும் பணம் கொடுக்கும் பைனான்சியர்கள் இடையே பிரச்சனை வர இந்த படம் கைவிடப்பட்டது இதனால் மனம் நொந்து போன பாலா சிவகுமாரிடம் விஷயத்தை சொல்லி புலம்பி இருக்கிறார் அதன் பிறகு சேது படம் அதிரடியாக உருவானது. அந்தப் படத்தில் விக்ரமுக்கு அண்ணனாக சிவகுமாரை நடிக்க வைத்து பாலா அழகு பார்த்தார்.