செழியனை அடித்து அசிங்கப்படுத்தும் ஜெனியின் அப்பா!! மகன காணுமே என ரோட்டிலேயே நிற்கும் பாக்யா. பாக்கியலட்சுமி.

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி வீட்டிற்கு வந்து ஜோசப்பை ஹோட்டலில் பார்த்ததையும் அங்கு அவர் சொன்னதையும் சொல்கிறார். அதைக்கேட்ட செழியன் உடனே கோபமாகி அங்கிருந்து ஜெனி வீட்டுக்கு செல்கிறார்.

ஜெனி வீட்டின் கதவை தட்டுகிறார் செழியன். அப்போது அங்கு ஜோசப் வந்து கதவை திறக்கிறார். நீ இங்க எதுக்கு வந்த வெளிய போ என சொல்கிறார் நான் ஜெனிய பாக்கணும் ஜெனி கிட்ட பேசணும் என சொல்லி உள்ளே சென்று ஜெனி உனக்கு கல்யாணமா உன்ன நான் யார்கிட்டயும் விட்டு தர மாட்டேன் நீயும் ஏன் குழந்தையும் எனக்கு வேணும். நான் தப்பு செஞ்சேன் தான் இல்லைன்னு சொல்லல ஆனா அது எந்த சூழ்நிலையில பண்ணுனன் எல்லா உண்மையும் நான் உன்கிட்ட சொல்றேன் எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ண டைம் குடு என செழியன் சொல்கிறார்.

அதெல்லாம் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் மாலினி வந்து நடந்த எல்லா உண்மையும் சொல்லிட்டா என சொல்கிறார் ஜோசப். அதற்கு அவ பொய் சொல்லுவா நம்பாதே நான் எல்லாத்தையும் சொல்றேன் எனக்கு கொஞ்சம் டைம் கொடு என கேட்கிறார். அதெல்லாம் டைம் கொடுக்க முடியாது என சொல்லி ஜோசப் செழியனை பயங்கரமாக அடிக்கிறார்.

பிறந்தநாள் கூட பார்க்காம சரவணனுக்கு அறைவிட்ட பாண்டியன்! குமரவேலுக்கு அறைவிட்ட மாரி.. பாண்டியன் ஸ்டோர்..

ஜெனியும் அவங்க அம்மாவும் ஜோசப்பை தடுக்கின்றனர். அப்பவும் விடாமல் அடிக்கிறார். உடனே செழியன் ஜெனியை பார்த்து நீ கல்யாணம் பண்ணுவியா எனக் கேட்கிறார் அதற்கு ஜெனி  ஒண்ணுமே பதில் சொல்லாமல் நிற்கிறார். உடனே ஜோசப் ஏற்கனவே என் பேச்சை மீறி தான் உன்ன கல்யாணம் பண்ணா இப்ப அவ வாழ்க்கை என்னாச்சு இந்த தடவ நான் சொல்றத தான் கேப்பா என சொல்கிறார்.

எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க நான் தப்பு செஞ்சேன் தான் ஆனா இப்ப உணர்ந்துட்டேன். இனிமே எதுவும் பண்ண மாட்டேன் என சொல்ல ஆனால் ஜெனி அப்பா அடித்து வெளியே தள்ளி கேட்டை  இழுத்து மூடி விடுகிறார்.

பாக்யா வீட்டுக்கு வெளியே நின்னு செழியன் இன்னும் வரலையே என பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது தாத்தா வந்து ஏமா இங்க நிக்கிற என கேட்கிறார். அதற்கு பாக்யா, செழியன் இன்னும் வீட்டுக்கு வரல மாமா அதான் எனக்கு பயமா இருக்கு, அவர் வந்து சொன்ன கோபத்துல செழியன் ஜெனி வீட்டுக்கு போயிருப்பான்னு எனக்கு பயமா இருக்கு அங்க போனா அவங்க அப்பா ஏதாவது பண்ணிடுவாரு அதான் என  சொல்கிறாள்.

ஐஸ் கட்டியை தூக்கி விஜயா தலையில் வைத்த ரோகிணி.. மொத்த சோலியை முடித்து ரிவிட் அடித்த மீனா முத்து..

உடனே தாத்தாவும் ஆமாம் நான் கூட யோசிக்கல நீ சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கும் தோணுது. இப்ப என்ன பண்றது என பேசிக் கொண்டிருக்க உடனே பாக்கியா எழில் வேலையை விட்டு வர நேரம் தான் அவன் கிட்ட சொன்னா அவன் போயி பாத்துட்டு வருவான் என சொல்கிறாள்.

உடனே பாக்கியா எழிலுக்கு போன் பண்ணி நடந்து அனைத்தையும் சொல்கிறாள். எழில் அங்கு போய் செழியனை பார்க்கிறார். என்னடா ஆச்சு ஏன் உனக்கு இப்படி அடிபட்டு இருக்கு எனக் கேட்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் ஜெனிக்கு கல்யாணம்மாண்டா, அவ என்ன விட்டுட்டு  கல்யாணம் பண்ணிக் கிட்ட நான் கண்டிப்பா செத்துருவேன் என சொல்கிறார். சரி அதை விடு இப்ப எப்படி உனக்கு இப்படி காயம் ஆனது என கேட்கிறார். அதற்கு செழியன் ஜெனி அப்பா என்ன அடிச்சி அசிங்கப்படுத்திட்டார் டா என சொல்கிறார். உடனே எழில் இரு நான் போய் கேட்கிறேன் உன்னை அடிச்சா கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சிட்டு இருக்காரா அவர் என கூறுகிறார். அதற்கு செழியன்  எவ்வளவு அடி வேணும்னாலும் தாங்கிப்பேன் ஆனா அவங்க இல்லாம என்னால இருக்க முடியாது என அழுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.