ஜெனிக்கு கல்யாணம் பண்ண பிளான் போடும் அப்பா!! மினிஸ்டரை ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு போக விடாமல் தடுக்கும் கோபி.. பாக்கியலட்சுமி எபிசொட்

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்காக பாக்கியா குடும்பத்தில் அனைவரும் ரெஸ்டாரண்டில் இருக்கின்றனர். தாத்தாவும் பாட்டியும் கோவிலுக்கு சென்றுள்ளனர். அமிர்தா ரெஸ்டாரண்டில் அழகாக கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார். இனியா குழந்தையுடன் செல்பி எடுத்துக் கொண்டு  இருக்கிறார். அப்போது வந்த பாக்யா இனியாவிடம் அமிர்தாவுக்கு கோலம் போட உதவி பண்ணலாம்ல எப்ப பாரு போனையே பாத்துட்டு இரு என திட்டுகிறார்.

அதனை தொடர்ந்து செழியன் வெளியே போன் பேசிக்கொண்டி ருக்கிறார். அதைப் பார்த்த பாக்யா  ஜெனி ஞாபகம் வந்து இன்னும் அவள் வரவில்லை என கவலைப்படுகிறார். ஜெனி தான் எனக்கு ஆரம்பத்துல இருந்து எல்லா விஷயத்திலும் கூடவே இருந்தா ஆனா இப்ப அவை இல்லை என வருத்தப்படுகிறாள். அதற்கு அமிர்தா கண்டிப்பா ஜெனி வருவாங்க என சொல்லி பாக்யாவை ஆறுதல் படுத்துகிறார்.

5 வயதிலேயே அப்பாவால் ஏற்பட்ட கசப்பான அனுபவம்.. 51 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அஜித் பட நடிகை.. காரணம் இதுதான்..

அதே நேரத்தில் ஜெனி ஃபங்ஷனுக்கு வருவதற்காக கிளம்புகிறார். அதைப் பார்த்த ஜெனியின் பெற்றோர்கள் போக கூடாது என தடுக்கின்றனர். அதற்கு ஜெனி அவரது அப்பாவிடம் செழியன் விஷயத்தில் நீங்க சொல்றத நான் கேட்கிறேன் அதுக்காக எல்லா விஷயத்தையும் கேட்கணும் என்கிற அவசியம் இல்லை. அந்த ஆன்ட்டி என்ன அவங்க வீட்டு ஒரு பொண்ணா  பாத்துக்கிட்டாங்க அதுக்காகவாவது நான் போய் தான் ஆகணும் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதனால் கடுப்பான ஜெனியின் அப்பா சீக்கிரமே உனக்கு டைவர்ஸ் வாங்கி ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுறேன் அப்புறம் என்ன செய்வேன்னு பாக்குறேன் என கூறுகிறார்.

அடுத்த சீனில் கோபி மினிஸ்டரின் பி ஏ வுக்கு போன் பண்ணி இன்னைக்கு கண்டிப்பா மினிஸ்டர் ஸ்கூல் திறப்பு விழாவிற்கு வருவாங்களா என கன்ஃபார்ம் பண்ணிக் கொள்கிறார். இப்படி அவர் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே மினிஸ்டர் வந்து இன்னைக்கு என்ன ப்ரோக்ராம் என கேட்க அதற்கு பிஏ  ஸ்கூல் ஆனுவல்டே என சொல்லி அழைத்து செல்கிறார்.

தாளி கட்ட போகும் சந்தோஷத்தில் டான்ஸ் ஆடும் ரவுடி!! ஐஸ்வர்யா இருக்கும் இடத்தை கண்டுபிடித்த கோடீஸ்வரி!! செத்துட்டான்னு சந்தோஷப்படும் கௌதம் சித்ராதேவி ..

இல்லையே இன்னைக்கி 17ஆம் தேதி தான இன்னைக்கு வேற ஏதோ ஒரு ப்ரோக்ராம் இருக்கே என மினிஸ்டர் சொல்ல பிஏஓ இல்ல மேடம் இந்த ஒரு ப்ரோக்ராம் தான் என பாக்கியா ப்ரோக்ராமை மறைத்து விடுகிறார். உடனே  மினிஸ்டரும் காரில் புறப்பட்டு விடுகிறார். இதை அறிந்த கோபி இன்னைக்கு எப்படி அவ ரெஸ்டாரன்ட் திறக்கிறானு பார்க்கிறேன் என சந்தோஷப்படுகிறார்.

அதைத்தொடர்ந்து ரெஸ்டாரண்டில் அனைவரும் காபி குடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் வெளியே நின்று போன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு ஜெனி குழந்தையுடன் காரில் வந்து இறங்குகிறார்.

ராகினி சொன்னதைக் கேட்டு மரண பயத்தில் அர்ஜுன்..! நீங்க வருத்தப்படுவதால ஒரு பிரயோஜனமும் கிடையாது நடேசன் சார்..

இதை பார்த்த செல்வி பாக்கியாவிடம் சொல்கிறார், உடனே அனைவரும் வெளியே வந்து ஜெனியையும் குழந்தையும் உள்ளே கூப்பிட்டு போகிறார்கள். செழியன் ஜெனியை பார்க்கிறார். அதுமட்டுமில்லாமல் குழந்தையையும் பார்க்க துடிக்கிறார்.குழந்தையை அனைவரும் மாறி மாறி தூக்கி வைத்திருக்கின்றனர். மேலும் செழியன் குழந்தையை தாவித்தாவி பார்க்க முயற்சிக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.