தாளி கட்ட போகும் சந்தோஷத்தில் டான்ஸ் ஆடும் ரவுடி!! ஐஸ்வர்யா இருக்கும் இடத்தை கண்டுபிடித்த கோடீஸ்வரி!! செத்துட்டான்னு சந்தோஷப்படும் கௌதம் சித்ராதேவி ..

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் போலீஸ் ஹாஸ்பிடலுக்கு வந்து சூர்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இப்ப நடந்த இந்த ஐஸ்வர்யா கடத்தலுக்கும், ஏற்கனவே நடந்த சிலை கடத்தலுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு கண்டிப்பாக நான் கண்டுபிடிக்காம விட மாட்டேன் என கூறுகிறார். இதை கேட்டா சித்ராதேவி இவன் என்ன நடந்த எல்லாத்தையும் கரெக்டா சொல்றானே கண்டுபிடிச்சிடுவானோ என பயப்படுகிறாள்.

ஐஸ்வர்யாவை கடத்திய ரவுடி பேசிக் கொண்டிருக்கும் அனைத்தையும்  கோடீஸ்வரி  கேட்டுக் கொண்டிருக்கிறாள்.  அந்த ரவுடி மாலை வாங்கும் போது ஐஸ்வர்யாவுக்கு மேட்ச் ஆக இருக்க வேண்டும் என அவளது போட்டோவை பக்கத்தில் வைத்து பார்த்து மாலை வாங்குகிறார் அதை கோடீஸ்வரி பார்த்து விடுகிறார்.

ராகினி சொன்னதைக் கேட்டு மரண பயத்தில் அர்ஜுன்..! நீங்க வருத்தப்படுவதால ஒரு பிரயோஜனமும் கிடையாது நடேசன் சார்..

ரவுடி மாலை வாங்கிட்டு வரும்போது கோடீஸ்வரி இடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். கோடீஸ்வரி ஆசிர்வாதம் மட்டும் வாங்குறீங்க பொண்ணு யாருன்னு காமிங்க உங்களுக்கு பொருத்தமா இருக்கான்னு சொல்றேன் என கூறுகிறாள். அப்போது ரவுடி போனில் இருக்கும் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை காட்டுகிறார் அதை பார்த்து கோடீஸ்வரி கன்பார்ம் செய்து கொள்கிறாள்.

அதை தொடர்ந்து ரவுடிக்கு ஒரு போன் கால் வருகிறது அந்த காலில் அவர் ஐஸ்வர்யா இருக்கும் லொகேஷனை  சொல்லிவிட்டு ரவுடி கிளம்பு விடுகிறான். உடனே கோடீஸ்வரியும் ஒரு ஆட்டோவை பிடித்து அந்த லொகேஷனுக்கு ஃபாலோ பண்ணி போகிறார்.

ரஜினியின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடும் நடிகர் லிவிங்ஸ்டன்.. மனைவியின் உயிரை காப்பாற்றிய தெய்வம்

போகும்போதே மகாவுக்கு போன் பண்ணி சொல்லிவிடலாம் என போன் பண்ணுகிறார். அப்போது மகா போனை எடுக்கவில்லை திரும்பவும் போன் பண்ண சூர்யா எடுக்கிறார்.சூர்யா ஐஸ்வர்யாவை காணும் என்கின்ற உண்மையை கோடீஸ்வரிடம் சொல்கிறார். ஆனால் கோடீஸ்வரியோ சூர்யாவிடம் நடந்த எந்த விஷயத்தையும்  சொல்லவில்லை.

இதற்கிடையில் ரவுடி வாங்கி வந்த புடவை, தாலி, மாலை அனைத்தையும் காட்டி சந்தோஷத்தில்  டான்ஸ் ஆடுகிறார். ஆனால் ஐஸ்வர்யாவோ கடுப்பாகி  நீ என்ன கொன்னு போட்டா கூட எனக்கு சந்தோசம் டா ஆனா இப்படி ரொமான்ஸ் மட்டும் பண்ணாதடா என திட்டுகிறாள். அதற்கு ரவுடி நான் உனக்கு வைரத்துல வலைய வாங்கி போடலாம்னு நினைக்கிறேன். ஆனா நீ என்னடான்னா என்ன கொன்னுட்டு விலங்கு மாட்டிக்கணும்னு ஆசைப்படுற என  கூறுகிறார்.

கோடீஸ்வரி பாலோவ் பண்ணி போயி ஐஸ்வர்யா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார்.அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.