ஆபீசை மூடியாச்சு என்ற உண்மையை சொன்ன ராதிகா!!! மீண்டும் பாக்யாவை எதிர்க்கும் ராதிகா, கோபி!! எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி…

baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில்  ராதிகா வீட்டிற்கு வரும்போது  கோபியை திட்டி கொண்டே வருகிறார். அதனால் கோபமான ஈஸ்வரி கோபியை கூப்பிட்டு என்ன பிரச்சனை என கேட்கிறார். அதற்கு கோபி நான் ஆபீஸ்ல இருந்து கிளம்பியதிலிருந்து காரில் வரும்போதும் என்ன திட்டிக்கிட்டே இருக்கா என சொல்கிறார்.

ஒன்னும் தெரியாத  நல்ல பிள்ளை போல அம்மாவிடம் நடிக்கிறார். அதற்கு உடனே ஈஸ்வரி ராதிகாவை கூப்பிட்டு எதுக்கு என் புள்ளைய திட்டுற அவன மாதிரி நல்லவன் இந்த ஊரிலேயே இருக்க முடியாது உன்னால தான் அவனுக்கு ஏற்கனவே நெஞ்சுவலி வந்தது இன்னுமும் நீ சண்டை போட்டுட்டு தான் இருக்கியா என திட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் என் பையன் மேல எந்த தப்பும் இருக்காது அவன் ரொம்ப நல்லவன் எப்பவும் எந்த பொய்யும் சொல்ல மாட்டான் யாரையும் ஏமாத்த மாட்டான் என கோபியை ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ராதிகா உங்க பையன் ரொம்ப நல்லவர் தான உங்ககிட்ட  எதையும் மறைக்க மாட்டார்ல அப்ப உங்ககிட்ட சொன்னாரா கம்பெனிய இழுத்து மூடியாச்சுன்னு என கேட்கிறார். அதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர்.

அதை காட்டுங்க என கேட்ட ரசிகர் இந்த பார்த்துக்கோ என காட்டிய நடிகை.! ஆத்தாடி இவ்வளவு பெருசா…

செழியன் தாத்தா பாட்டி என அனைவருமே எங்க கிட்டயாவது உண்மையை சொல்லி இருக்கலாம்ல நாங்க ஏதாவது செஞ்சு இருப்போம்ல என மாத்தி மாத்தி கோபியை கேட்கின்றனர். கோபி நான் என்ன சொல்றது என் கம்பெனி ஒரு வருஷமா நஷ்டத்துல  போகுது ஆறு மாசமா யாருக்கும் சம்பளம் கொடுக்கல என சொல்லி உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று அழுகிறார்.

அதோடு மட்டுமில்லாமல் நான்  அடுத்த பிசினஸ் பண்ண பார்த்துகிட்டு இருக்கேன் வேற கம்பெனிக்கும் வேலை கேட்டு அப்ளை பண்ணி இருக்கேன் என சொல்கிறார். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போது கோபியின் அப்பாவிற்கு இருமல் வருகிறது உடனே பாக்கியா தண்ணி கொண்டு வந்து கொடுக்கிறார். உடனே அவரைப் பார்த்த கோபி இப்போ உனக்கு சந்தோஷமா இருக்குமே நான் வேலை இல்லாம இருக்கிறது என கேட்கிறார்.

அது எதையும் கண்டு கொள்ளாமல் பாக்யா போய்விடுகிறாள். அடுத்த சீனில்  கோபி கிச்சனுக்கு தண்ணீர் எடுக்க போன் பேசிக் கொண்டே  வருகிறார். பிறகு பாக்யாவும் வந்து கிச்சனை துடைத்துக் கொண்டிருக்கிறாள்.  கோபி போனில் அவரது நண்பரிடம் அ வருக்கு ஒரு வேலை பார்க்க சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். பேசி முடித்துவிட்டு பாக்யாவை பார்த்து உனக்கு இப்ப சந்தோஷமா இருக்குமே நீ மேல மேல முன்னேறி ஹோட்டல் ஆரம்பிக்க போற நான் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கேன் உனக்கு சந்தோஷமா இருக்குல என கேட்கிறார்.

சத்தியா முகத்தில் பிச்சை காசு என பணத்தை வீசிய முத்து..முத்து மேல் ரோகிணிக்கு வந்த சந்தேகம்.. ஒட்டுக்கேட்ட மீனா

உடனே அதற்கு பாக்யா அப்படியெல்லாம் இல்ல நான் வேணா உங்களுக்கு ஒரு ஐடியா சொல்றேன் அதாவது என்னோட ஹோட்டலுக்கு நான் இப்ப நிறைய பேர வேலைக்கு எடுக்க போறேன் நீங்க வேணா என் ஹோட்டலுக்கு மேனேஜர் வாங்க என சொல்கிறார்.  இதைக் கேட்ட கோபி நான் உன் ஹோட்டலுக்கு பத்துல ஒரு ஆளா வேலைக்கு வரணுமா என நக்கலா பேசிக்கொண்டு ராதிகாவை கூப்பிட்டு பாக்கியா சொன்னதை சொல்கிறார். இதைக் கேட்ட ராதிகா மற்றும் கோபி இருவருமே பாக்யாவை  பயங்கர கோபமாக திமிராக  முறைக்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.