பாக்கியாவிடம் அசிங்கப்பட்டு நிற்கும் கோபி!! சும்மா கெத்தாக வந்த பாக்யா..

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில்  கோபியின் ரெஸ்டாரண்டுக்கு  ஈஸ்வரி வருகிறார். வந்து நான் சமைச்சு தரேன் என்ன சமைக்கணும் சொல்லு என கேட்கிறார்.  கோபி என்னென்ன சமைக்கனும்னு சொன்னதும்  என்ன லிஸ்ட் போயிட்டே இருக்கு இதெல்லாம் என்னால சமைக்க முடியாது ஒரு பத்து பதினைந்து பேருக்குன்னாக் கூட ஓகே நீ என்ன அதிகமா சொல்ற என்னால முடியாது என சொல்லி விடுகிறார்.

உடனே கோபி என்னம்மா நீங்க இப்படி சொல்றீங்க இப்ப நான் என்ன பண்ணுவேன் என புலம்புகிறார். உடனே ஈஸ்வரி என்ன கொஞ்சம் யோசிக்க விடு என சொல்லி யோசித்து பாக்யாவுக்கு போன் பண்ணி எனக்கு தெரிஞ்சவங்க வீட்ல ஒரு விசேஷம் அவங்க சமைச்சு தர சொல்றாங்க  அதுவும் இன்னும் 1 1/2 மணி நேரத்துல என சொல்ல அதற்கு பாக்கியா ஏன் அத்தை உங்க பையன் தான் ரெஸ்டாரன்ட் வச்சிருக்காருல அவருக்கு ஆர்டர் கொடுக்காம எனக்கு குடுக்குறீங்க என கேட்கிறார்.

உட்காருகிற சேர் கூட கடனா!! பாண்டியன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகும் பெண் வீட்டார்!! கொஞ்சநஞ்ச பொய்யாடா சொல்லியிருக்கீங்க..

அதற்கு ஈஸ்வரி பாட்டி அவனுக்கு ரெஸ்டாரன்ட் பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு உனக்கு தானே டல்லா போகுது அதான் உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு என பொய் சொல்லி விடுகிறார். பாக்கியா நேரம் ரொம்ப கம்மியா இருக்கு அது மட்டும் இல்லாம ஆடர் அதிகமா இருக்கு என்னால் செய்ய முடியாது அத்தை என கூறுகிறார். ஆனால் ஈஸ்வரியோ நீ எனக்காக இதை கண்டிப்பா செஞ்சு ஆகணும் என வற்புறுத்துகிறார். உடனே பாக்யா வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கும்  ஒரு பெண்ணிடம் சொல்லி என்னென்ன ஆர்டர் எவ்வளவு வேணும்கிறத  இந்த நம்பருக்கு அனுப்பிடு என சொல்கிறார். மேலும் கோபி யார்கிட்டமா ஆர்டர் பண்ணி இருக்கீங்க என்னம்மா செஞ்சி இருக்கீங்க எனக் கேட்க அதெல்லாம் உனக்கு தேவையில்ல உனக்கு கரெக்ட்டா சாப்பாடு வந்துரும் என பாக்கியாவிடம் ஆர்டர் பண்ணியதை சொல்லாமல் மறைத்து விடுகிறார். ஆனால் கோபி ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கும் அந்தப் பொண்னோ ஆர்டர் உடன் சேர்த்து லொகேஷனையும் அனுப்பி விடுகிறார்.

மாமா டவுசர் கிழிஞ்சுச்சு!! கோபியை வச்சு செஞ்ச எழில்.. அசிங்கம் தாங்காமல் தெறித்து ஓடிய கோபி..

பாக்கியாவோ சமைத்து முடித்துவிட்டு  வண்டியில் சாப்பாடு ஏத்திக்கொண்டு லொகேஷனை பார்க்காமலேயே  வந்துவிடுகிறார். ஆனால் அங்கு வந்த பிறகு போர்டை பார்த்துவிட்டு உள்ளே போகிறார்.  உடனே பாக்கியா ஈஸ்வரிடம் அத்தை லொகேஷனை மாத்தி அனுப்பிட்டீங்களா எங்கன்னு சொல்லுங்க அங்க கொண்டு இறக்கி விடுறேன் என சொல்ல கோபி ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கும் ஆட்கள் இல்லை இதுதான் சரியான நேரம் நீங்க கரெக்டா தான் வந்திருக்கீங்க என சொல்கிறார். கோபிக்கு பாக்யா அங்கு வந்ததும் அசிங்கமாய் போய் விடுகிறது.

உடனே ஈஸ்வரியிடம் அம்மா இவகிட்டையா ஆர்டர் பண்ணிங்க  ஏமா இப்படி பண்ணீங்க என கேட்க நான் சரியா தான்டா செஞ்சேன் நான் ஆள் அனுப்பி சாப்பாடு எடுத்துக்கிறேன்னு சொன்னேன் ஆனா உன்கிட்ட வேலை பார்க்கிறவங்க தான் தப்பு பண்ணிட்டாங்க என சொல்ல உடனே கோபி ஃபர்ஸ்ட் இவங்க எல்லாத்தையும் வேலைய விட்டு தூக்குறேன் என சொல்கிறார்.

சாப்பாட்டை இறக்கி வைத்துவிட்டு  பாக்கியா ஈஸ்வரியிடம் போய் கடவுள் என்னெல்லாம் செய்றாரு பாருங்க அத்தை நீங்க என்கிட்ட மறைக்கணும்னு நினைச்சீங்க ஆனா அத அப்படியே அப்பட்டமா காமிச்சு குடுத்துட்டாரு என ஈஸ்வரியிடம் சொல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.