பாக்யாவை கட்டி பிடித்து அழுது நன்றி சொல்லும் செழியன்.! மாமியாரைப் பற்றி பாக்கியாவிடம் ஏத்திவிடும் ராதிகா..

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ரெஸ்டாரண்டில் அமிர்தாவும் செல்வியும் பேசிக்கொள்கின்றனர். அப்போது  அமிர்தா எழில், அத்தை ரெண்டு பேருமே போன் எடுக்கல போன காரியம் என்ன ஆச்சுன்னு ஒண்ணுமே தெரியல என சொல்ல  அதற்கு செல்வி முக்கியமான விஷயம் இல்ல அதனாலதான் என சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாக்யாவும் எழிலும் அங்கு வருகின்றனர்.

அவர்கள் வந்ததும் அமிர்தா போன விஷயம் என்ன ஆச்சு என கேட்க அதற்கு இரண்டு பேரும் அமைதியாக ஒன்னும் சொல்லாமல் சோகமாக இருக்கின்றனர். அதை புரிந்து கொண்டு அமிர்தாவோ சரி விடுங்க பாத்துக்கலாம் என சொல்கிறார். உடனே பாக்கியாவும் எழிலும் சிரிக்கின்றனர். அதைப் பார்த்த அமிர்தா  என்ன சிரிக்கிறீங்க எனக் கேட்க அதற்கு பாக்கியா அவங்க சமாதானம் ஆகிட்டாங்க, அவங்கள வீட்டுக்கே கொண்டு வந்து விட்டுட்டேன் என சொல்கிறாள்.

வீட்டுக்கு தெரியாமல் பொண்டாட்டிக்காக தூங்காமல் கூட நைட் டூட்டி பார்க்கும் கதிர்!! சரவணன் கல்யாணத்தை நிறுத்தியது யார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட மீனா!!பாண்டியன் ஸ்டோர்.

உடனே அமிர்தா பாட்டி என்ன சொன்னாங்க என கேட்கிறார். அதற்கு முதல்ல கோவமா மூஞ்ச தூக்கி வச்சிருந்தாங்க அப்புறம் குழந்தை முகத்தை பார்த்த உடனே வாங்கி கொஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க என எழில் சொல்கிறார். உடனே அமிர்தா எனக்கு இப்பவே போய் அவங்கள பாக்கணும்னு தோணுது என சொல்ல பாக்யா நீ வேணா எழில் கூட போ என சொல்கிறாள். அதற்கு அமிர்தா வேண்டாம் நான் உங்க கூடவே நைட் வந்துக்குறேன் என சொல்கிறார்.

அதனைதொடர்ந்து செல்வி இப்பதான் பாக்கியா அக்கா முகத்துல சிரிப்பே வருது. அமிர்தா பிரச்சனை,செழியன் பிரச்சனைன்னு எப்ப பாரு புலம்பிக்கிட்டு இருப்பாங்க  இப்ப ஒரு வழியா எல்லாத்தையும் சரி பண்ணிட்டாங்க என சொன்னதும் எழில் எங்க அம்மா மாதிரி யாரும் இருக்க முடியாது என சொல்லி கட்டி பிடிக்கிறார்.

வாசுதேவன் நீங்க செய்யறது ரொம்ப பெரிய தப்பு.. முத்துக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா.? ரோகினி உங்க ரூட் கிளியர்…

அதனைத் தொடர்ந்து அடுத்த சீனில்  வீட்டில் பாக்யா காய்கறி கட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த தாத்தா எப்படிம்மா இவங்கள ஒன்னு சேத்துவச்சா என கேட்கிறார். அதற்கு பாக்கியா அதெல்லாம் ரகசியம் சொல்ல முடியாது என விளையாட்டாக பேசுகிறார். இதை ராதிகாவும் பாட்டியும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து  பாட்டி நீ தான் இவங்க சேர்ந்ததற்கு காரணம்ன்னு நினைக்கிறாயா? கிடையாது நான் செழியனுக்கு பொண்ணு பார்த்தா இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் பண்ணுனேன் என அந்தர்  பல்ட்டி அடிக்கிறார்.

இதைப் பார்த்த தாத்தா இவளுக்கு வாய் மட்டும் இல்லன்னா ஒருத்தன் கூட மதிக்க மாட்டான். எப்படி பேச்ச மாத்திட்டா பாரு என சொல்லி சிரிக்கிறார். அதைப் பார்த்து ராதிகாவும் சிரிக்கிறார். மேலும் ராதிகா பாக்கியாவிடம் அத்தை இப்படி பேசிட்டு போறாங்களே உங்களுக்கு கோபம் வரலையா என கேட்க. கோபம் வருது தான் ஆனா நம்ப அத்தைத்தான என விட்டுடுவேன் என சொல்கிறார். உடனே ராதிகா நம்ப அத்தையா என கேட்கிறார்.

மேலும் பாக்கியா சமைத்து முடித்துவிட்டு யாரும் சாப்பிட வரலையா என மேலே போய் பார்க்கிறார். அங்கு செழியன், ஜெனி, அமிர்தா, இனியா, எழில் என அனைவரும் பேசி சிரிச்சு சந்தோஷமாக இருக்கின்றனர். அதைப் பார்த்து பாக்கியா  கடவுளிடம் வணங்குகிறாள். அதை பார்த்த செழியன் பாக்கியாவை கட்டிப்பிடித்து ஏன் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சன்ம்மா ஆனால்  நீ அதை திருப்பி கொடுத்திருக்க என சொல்கிறார். அதற்கு பாக்யா இனிமேலாவது ஜெனியை நல்லா பாத்துக்க நீ அவளை காதலிக்கிறதை விட  அவ உன்ன அதிகமா காதலிக்கிற அதனால் தான் உன் தப்ப மன்னிச்சி திரும்ப வந்து இருக்கா என சொல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.