நடப்பது தெரியாமல் பாக்கியாவை திட்டி தீர்க்கும் ஈஸ்வரி, கோபி!! ஜெனிக்கு அட்வைஸ் பண்ணும் மரியம்.! செழியனிடம் சண்டை போடும் ஜோசப்.

பாக்கியலட்சுமி  இன்றைய எபிசோடில் மரியம் மற்றும் பாக்யா இருவரும் பேசிக் கொள்கின்றனர். அப்போது பாக்யா மரியமிடம் ஜெனி எங்க கூட வரதா இருந்தா நீங்க அனுப்பி வச்சிடனும் என கேட்கிறார் அதற்கு மரியம்  வாங்க வந்து ஜெனி அப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு நீங்க கூட்டிட்டு போங்க என சொல்கிறார். அதற்கு பாக்யா  அவர் சத்தம் போடுவாரே என சொல்கிறார். நீங்க வாங்க அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என ஜெனி அம்மா சொல்லி அழைத்துப் போகிறார்.

வீட்டுக்கு போனதும் கார் சத்தம் கேட்டு ஜெனியின் அப்பா வெளியே வருகிறார். பாக்யா, செழியன், எழில் மூவரும் இறங்குவதை பார்த்து நீங்க எங்க இங்க வந்தீங்க என கேட்கிறார். அப்படி கேட்கும் போதே  செழியன் கார் டோரை தொறந்து ஜெனி இடமிருந்து பாப்பாவை வாங்குகிறார். அதனைத்தொடர்ந்து ஜெனியின் அம்மாவும் ஜெனியும் இறங்குகின்றனர். நடப்பதை பார்த்து  கோபத்துடன் ஜெனியின் அப்பா நிற்கிறார்.மரியம் அனைவரையும் வீட்டுக்குள் கூப்பிடுகிறார். உடனே ஜெனியின் அப்பா இவங்க எங்க இங்க வராங்க என கேட்கிறார். ஆமாம் நீ சர்ச்சுக்கு தானே போறேன்னு சொன்ன இப்ப என்ன இவங்க கூட வர என கேட்கிறார். இல்ல நானும் பாக்கியவும் சேர்ந்து ஜெனியையும் செழியையும் மீட் பண்ண வச்சோம். அவங்க ரெண்டு பேரும் பேசி சமாதானம் ஆயிட்டாங்க என சொல்கிறாள்.

அர்ஜுன் பேசிய வீடியோவை ராகினியிடம் காட்டிய தமிழ்.. அர்ஜுன் சட்டையை பிடித்து கேள்வி கேட்ட ராகினி.. அணுகுண்டு புஸ்வானமாகிய கதைதான்..

அதைக் கேட்ட ஜோசப், ஜெனி உனக்கு இவன் எவ்ளோ பெரிய துரோகம் செஞ்சிருக்கான் நீ எப்படி இவன மன்னிச்சு ஏத்துக்கலாம் என கோபப்படுகிறார். அதற்கு ஜெனி செழியன் செஞ்ச தப்ப உணர்ந்து என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாரு. அவர் இல்லாம என்னால இருக்க முடியாது பா என சொல்கிறார். செழியன் ஜோசப்பிடம் மன்னிப்பு கேட்க அதற்கு நீ என்கிட்ட பேசாத என ஜோசப் கோபமாக சொல்கிறார்.

உடனே மரியம் எல்லாத்தையும் நான் அவர்கிட்ட  பேசி புரிய வச்சிக்கிறேன். நீங்க இவள கூட்டிட்டு போங்க என சொல்கிறார். அதனைத் தொடர்ந்து ஜெனி  டிரஸ் மெடிசன் எல்லாத்தையும் பேக் பண்ணி கொண்டு இருக்கிறார். அப்போது மரியம் ஜெனிக்கு  அட்வைஸ் பண்ணுகிறார். நீ ஒன்னும் செழியன்னோட கேர்ள் ஃப்ரெண்ட் இல்ல அவனோட பொண்டாட்டி அவன் என்ன செய்கிறான் எங்க போறான் எல்லா விஷயத்தையும் நீ தெரிஞ்சு வச்சுக்கணும். இன்னொரு தடவை இப்படி ஒரு பிரச்சனை வரக்கூடாது நீதான் இனிமே பொறுப்பா இருந்து எல்லாத்தையும் பாத்துக்கணும் என அட்வைஸ் பண்ணுகிறார்.

ஒரு வழியாக குடித்துவிட்டு ரகளை செய்யப் போகும் முத்து.. பிச்சைக்காரர்கள் என்பது போல் அண்ணாமலையை அசிங்கம் படுத்தும் ஸ்ருதியின் அப்பா.. ரோகிணி மீது செம கடுப்பில் விஜயா..

அதே நேரத்தில்  ஈஸ்வரி கோபியிடம்  பாக்கியா  செழியனையும் எழிலையும் ஆட் ஏஜென்சிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி கூட்டிட்டு போனா இன்னும் வரல போன் பண்ணா போனும் எடுக்கல என புலம்பி கொண்டிருக்கிறார். உடனே கோபி இருங்க நான் எழிலுக்கு போன் பண்றேன் என சொல்கிறார் அதற்கு பாட்டி நான் எல்லாத்துக்கும் போன் பண்ணி பாத்துட்டேன் யாருமே எடுக்க மாட்டேங்குறாங்க என்ன ஆச்சுன்னு தெரியல. எனக்கு என்னமோ ஜோசப் வீட்டுக்கு போய் கால்ல விழுந்து இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைங்கன்னு கெஞ்சிக்கிட்டு இருப்பான்னு தோணுது என பாட்டி சொல்கிறார். உடனே தாத்தா உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா என ஈஸ்வரியை திட்டுகிறார். அத்துடன்  இன்றைய எபிசோடு முடிவடைகிறது.