அப்பனுக்கு புள்ள தப்பாமா பிறந்து இருக்கியே… பாக்கியாவிடம் வசமாக மாட்டிய செழியன்.. பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி..

Baakiyalakshmi today episode : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி சோகமாக படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது ஈஸ்வரி வந்து எதற்காக தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் உன்னுடைய பசங்க, உன் அம்மா, அப்பா, என எல்லாரும் நாங்க இருக்கோம் எங்களுடன் ஜாலியா நிம்மதியா பேசி சந்தோஷமாக இருக்க வேண்டியதுதானே எனக் கூறுகிறார். உடனே ஈஸ்வரி அவ போய்ட்டாளா என கேட்க அவங்க அம்மாவையும் பொண்ணையும் பார்க்க போய் இருக்கா என கூறுகிறார்.

நான் பேசாம அங்கேயே போய்டுறேன் அம்மா எதுக்கு தேவை இல்லாம பிரச்சனை என பேச உனக்கு உடம்பு சரியாகும் வரைக்கும் நீ இங்க தான் இருக்கணும் என கூறி விடுகிறார் ஈஸ்வரி. அடுத்த காட்சியில் பாக்கியா வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது ஆர்டர் கன்ஃபார்ம் ஆகிவிட்டது. கொஞ்சம் வருவதற்கு லேட் ஆகிவிட்டது என பேசிக் கொண்டிருக்கும் பொழுது செழியன் வந்துட்டானா என கேட்கிறார் இன்னும் வரவே இல்லை ஆபீஸ்க்கு வேலை என்று போனான் எனக் கூற உடனே பாக்யா தொடர்ந்து செழியனுக்கு போன் பண்ணுகிறார்.

ஜான்சி ராணியின் கொட்டத்தை அடக்கிய சக்தி.! கதிரை கட்டி போட்டு அடிக்கும் கௌதம்.. பதட்டத்தில் மருமகள்கள்

ஆனால் கோபி எதற்காக அவனை டிஸ்டர்ப் பண்ணுகிறாய் என கேட்க அவன் இவ்வளவு நேரம் வரல அதனால கண்டிப்பா போன் பண்ணி கேட்பேன் என தொடர்ந்து போன் பண்ணுகிறார் இதனால் ஒரு சண்டை வேண்டாம் என ஈஸ்வரி கோபியை அழைத்து செல்கிறார். உடனே பாக்யா எழிலை கூப்பிட்டு உடனடியாக வா ஒரு விஷயமா வெளியில போகணும் என செழியன் ஆபீஸ்க்கு போகிறார்கள் அங்கு செழியணை பற்றி விசாரிக்கிறார்கள் ஆனால் செழியன் வரவில்லை என செழியன் நண்பன் கூறி விடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் மாலினி ப்ராஜெக்ட் எப்பவோ முடிந்துவிட்டது அது சின்ன ப்ராஜெக்ட் தான் ஒரு மாசம் தான் எனக் கூற பாக்கியா அதிர்ச்சி அடைகிறார் அடுத்த நாள் காலையில் கோவிலுக்கு அன்னதானம் போடுவதற்காக பாக்யா செல்கிறார் அங்கு மாலினையும் வந்துள்ளார் பாக்யவை பார்த்ததால் மாலினி செழியனுக்கு போன் பண்ணி உங்க அம்மாவிடம் சொல்லப்போகிறேன் என கூற செழியன் பதறிடித்து போய் கோவிலுக்கு வருகிறார்.

முக்கிய இடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த லியோ.. இத்தனை கோடி வசூலா.?

கோவிலுக்கு வந்த செழியன் மாலினி பிடித்து ஒரு ஓரமாக அழைத்து சென்று தயவு செய்து கிளம்பு என கெஞ்சுகிறார். இதனை செல்வி பார்த்துவிட்டு பாக்கியவிடம் கூற பாக்யாவும் நேரில் வந்து பார்க்கிறார். உடனே பாக்யா செழியனிடம் சென்று உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன ஏதாவது தப்பு பண்ணிட்டியே என கேட்க செழியன் பாக்கியவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவ என்ன விடவே மாட்டேங்குற சைக்கோ மாதிரி நடந்துக்கிறா செத்துருவேன் சொல்லி மிரட்டுற ஏதாவது உங்களுக்கு சொல்லிடுவேன்னு மிரட்டுற என்கிட்ட ஏதாவது சொல்றதுக்கு நான் ஏன் நம்ப போறேன் நீ ஏதாவது தப்பு பண்ணிட்டியா என பாக்கியா கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என சாமி மீது சத்தியம் பண்ணுகிறார். ஆனால் செழியன் கோபியை போல் ஏதோ ஒரு திருட்டு வேலை செய்துள்ளார் என தெரிகிறது.இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

இனி வரும் எபிசோடில் மாலினி செழியனை எப்படி நடத்தப் போகிறார் செழியன் மாலினியிடம்  எப்படி அடிபணிந்து நடந்து கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.