நிலாவை பக்கத்தில் பார்த்தும் தூக்கி கொஞ்ச முடியாமல் தவிக்கும் கணேஷ்.. நடுராத்திரியில் பதறி அடித்து ஓடும் செழியன் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode ocober 11 : இன்றைய எபிசோடில் கணேஷ் அமிர்தாவை தேடி தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வீட்டில் அமிர்தா நிலாவுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருப்பதை பார்த்து விட்டார் மேலும் வீட்டு வாசலுக்கு நேராக எழில் அமிர்தா நிலாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பார்த்து அதிர்ச்சியாக கணேஷ் நிற்கிறார்.

அப்பொழுது பாக்கியலட்சுமி வந்து யாருப்பா நீ எழிலோட பிரண்டா, எழில கூப்பிடட்டுமா என்று கேட்க வேணாம் என்று கணேஷ் சோகத்தில் பீச்சுக்கு போய் அவங்க அப்பாவுக்கு போன் பண்ணி என்கிட்ட எல்லாத்தையும் மறச்சிட்டிங்க இல்ல, அமிர்தாவை சென்னைக்கு கூட்டிட்டு வந்து படிக்க வைத்து அவளுக்கு இன்னொரு கல்யாணமும் பண்ணி வச்சிருக்கீங்க..

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தூக்கி எறியப்பட்ட நிலைமை.. இன்று பிறந்தநாள் காணும் நிவின் பாலி பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

நான் அமிர்தவ அவ இருக்கிற வீட்டில பார்த்தேன் என்று சொல்ல உடனே கணேஷ் உடைய அப்பா அமிர்தாவுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு நம்மளால அந்த பொண்ணுக்கு எதுவும் ஆக கூடாது நீ வீட்டுக்கு வா என்று கூப்பிட கணேஷ் அப்ப என் வாழ்க்கை என்ன ஆகிறது நான் அமிர்தா கூட தான் வருவேன் என்று சொல்கிறார்.

பிறகு ராமமூர்த்தியும் செல்வியும் நிலவை கூட்டிகிட்டு பார்க்கு வந்திருக்கின்றனர்.. அங்கு இருந்த கணேசன் நிலாவை பார்த்துவிட்டு என் குழந்தை என்று எமோஷன் ஆகிறார்… அடுத்து மாலினி செழியனுக்கு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அனுப்பி இந்த மாதிரி என்கிட்ட நிறைய போட்டோஸ் வீடியோஸ் இருக்கு நீ இப்ப என்ன பாக்க வீட்டுக்கு வரலைன்னா..

அரசனாக மிரட்டும் அஜித்.. இந்த கம்பீரம் யாருக்கு வரும்.!

Baakiyalakshmi
Baakiyalakshmi

நான் உங்க வீட்டுக்கு இதெல்லாம் எடுத்துட்டு வருவேன் என்று பிளாக்மெயில் பண்ணுகிறார் உடனே செழியன் ஜெனியை தூங்க வைத்துவிட்டு மாலினியை பார்க்க திருட்டுத்தனமாக கிளம்புகிறார், இதை பார்த்த பாக்கியா எங்க இந்த நேரத்துல போற ஒழுங்கா மேல போ என்று செழியனை அனுப்ப விடாமல் தடுத்து உள்ளார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.