வீட்ல யாரும் இல்லாத நேரத்துல இரண்டு பேரும் சேர்ந்து லூட்டி அடிக்கிறீங்களா.. பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி – பாக்கியலட்சுமி சீரியல்

Baakiyalakshmi today episode November 25 :  இன்றைய எபிசோடில் பாக்கியா பொருட்காட்சியில் சமைப்பதற்கு தேவையான பாத்திரம் மற்றும் மளிகை ஜாமனை டெம்போவில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டார்.. பிறகு மழை கொட்டி தீர்க்கிறது அதனால் டிவியில் நியூஸ் சேனலில் பொருட்காட்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர் இதைக் கேட்டு பாக்கியா ரொம்ப மனசு கஷ்டமாகி இருக்கிறார்.

அந்த நேரத்தில் ஈஸ்வரி இதெல்லாம் உனக்கு தேவையா நாங்க அப்பவே வேண்டாம்னு சொன்னோம் கேட்டியா, ஒரு லட்சத்து 60 ஆயிரம் நஷ்டம் ஆயிடுச்சா.. இதுவரை உன் பணத்தை மட்டும் தான் விட்டுட்டு இருந்த, இப்ப எழிலோட பணத்தையும் சேர்த்து நஷ்டம் ஆகிட்ட.. என்று திட்டுகிறார் பிறகு கோபியும் என்கிட்ட இந்த பொருட்காட்சி காண்ட்ராக்ட் எப்படி நடத்துறேன்னு சவால் விட்ட இப்ப என்ன பண்ண போற..

குணசேகரனுக்கு சவால் விடும் சக்தி.. நினைத்தது போலவே ஈஸ்வரியை வேலையை விட்டு தூக்க போட்ட சரியான பிளான்! வேலையே வேண்டாம் என கும்பிடு போட்டு கிளம்பிய மருமகள்

பெரிய இவ மாதிரி எல்லா விஷயத்தையும் செஞ்சிரலாம்னு நினைக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா உங்களுக்கு என்ன பேசாம வாங்க என்று அழைத்துக் கொண்டு போகிறார்.. பிறகு எழில் அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு நான் போய் பொருட்காட்சி நடக்கிற இடத்துல நிலவரம் எப்படி இருக்கு நம்ம பொருள் எல்லாம் சேஃபா இருக்கான்னு போய் பாத்துட்டு வரேன் என்று சொல்ல அமிர்தா நானும் வரேன் என்று இரண்டு பேரும் கிளம்புகின்றனர்.

அடுத்து செழியன் லேப்டப்பில் ஆபீஸ் ஒர்க் பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது பழனிச்சாமி வீட்டிற்கு வந்து எப்படி இருக்கீங்க தம்பி என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் பிறகு பாக்கியாவும் வந்து என்ன சார் சொல்லாம வந்து இருக்கீங்க என்று கேட்க பொருட்காட்சி தள்ளி வச்சிருக்காங்க இல்ல அதனால நீங்க வருத்தத்துல இருப்பீங்க அதான் ஆறுதல் சொல்லிட்டு போலாம்னு வந்தேன் என்று சொல்கிறார் பிறகு செழியன் முக்கியமான ஆபீஸ் கால் நான் போய் பேசிட்டு வரேன் என்று வெளியே போகிறார்.

ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு வர சம்மதித்த அண்ணாமலை. ஆனா ஒரு கண்டிஷன் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பிறகு பாக்கியா மற்றும் பழனிச்சாமி இருவரும் உட்காந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது கோபி உள்ளே வந்து அம்மா எங்கே என்று கேட்க அத்தை, மாமா ரெண்டு பேரும் ஒரு பங்ஷனுக்கு போயிருக்காங்க என பாக்கியா சொல்கிறார். உடனே கோபி அப்ப யாரும் இல்லாத நேரத்துல ரெண்டு பேரும் தனியா உட்கார்ந்து லூட்டி அடிக்கிறீங்க உங்களுக்கு அசிங்கமா இல்லையா பெஸ்ட் பிரண்டு என்று சொல்லிட்டு அடிக்கடி இப்படித்தான் பார்க்கல ரோட்ல பார்த்து பேசிட்டு நிக்கிறீங்க என்று கேட்க அதை கேட்க நீங்க யாரு என்று பாக்கியா கோபியிடம் சண்டை போடுகிறார் இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.