ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு வர சம்மதித்த அண்ணாமலை. ஆனா ஒரு கண்டிஷன் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode November 25 : இன்றைய எபிசோடில் மீனா எல்லோரையும் சாப்பிட கூப்பிடுகிறார் அப்பொழுது விஜயா நான் சாப்பிட வரல ரவி இந்த வீட்டுக்கு வராம நான் பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று சொல்ல பிறகு மனோஜும் ரோகிணியும் வெளியே வந்து ஆன்ட்டி ரொம்ப பாவம் ஒரு பையன பிரிஞ்சு..

அம்மா கஷ்டப்படுறத என்னால புரிஞ்சுக்க முடியுது அவங்களுக்காக ரவியை வீட்டுக்கு கூப்பிடலாமே என்று சொல்கிறார் பிறகு அண்ணாமலை யோசித்துப் பார்த்துவிட்டு முத்து மனோஜ் இரண்டு பேரையும் நீங்க சொல்லுங்க ரவிய வீட்டுக்கு கூப்பிடலாமா என்று கேட்கிறார் அதற்கு மனோஜ் நீங்களும் அம்மாவும் சேர்ந்து முடிவெடுத்துக்கோங்க அப்பா என்கிறார்.

கே.ஜி.எஃப் புகழ் யாஷின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?

பிறகு முத்து அவன் வீட்டுக்கு வரக்கூடாது உங்கள் ஸ்டேஷன்ல உட்கார வச்சா.. உங்களை அவமானப் படுத்தின யாருமே இந்த வீட்ல இருக்க கூடாது அதுவும் அந்த பொண்ணு திமிரு புடிச்ச பொண்ணு அதெல்லாம் நம்ம வீட்டுக்கு செட்டாகாது வேணாம் என்று சொல்கிறார் பிறகு அண்ணாமலை இனிமேல் கோபப்பட்டு என்ன ஆகப்போகுது ரவி இந்த வீட்டுக்கு வரட்டும்..

ஆனா வாசுதேவன் என்ன சொத்துக்காக தானே உன் பையன என் பொண்ணு கூட பேச விட்டு இருக்க என்று  என்ன பார்த்து கேட்டான் அதை மறக்க முடியவில்லை அதனால் அவங்களே அவங்க பொண்ண அழிச்சிட்டு வந்து உங்க மருமகள பாத்துக்கோங்கன்னு சொன்னா மட்டும் ரவியும் அந்தப் பொண்ணும் இந்த வீட்டுக்கு வரலாம் என்று சொல்லிவிட்டார். அவங்க எப்படி கொண்டு வந்து விடுவாங்க என மீனா விஜயா எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.

வேண்டுமென்றே அர்ச்சனாவை வம்புக்கு இழுக்கும் விஷ்ணு.! அப்பனா நீங்களும் லவ் பண்றது எல்லாருக்கும் தெரியும்..

பிறகு விஜயா எனக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்தீங்களே அதுவரையும் சந்தோஷம் என்று சொல்கிறார்.. அடுத்து முத்து உன்ன கோவில்ல தூக்கிட்டு போனது உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது என்று சொல்ல மீனா என்னால வந்த வலி தானே நானே சரி பண்றேன் என்று தைலம் தேய்த்து விடுகிறார் பிறகு முதுகு வலிக்குது என்று முத்து சொல்வதும் முத்துவை படுக்க சொல்லி முதுகில் ஏறி மீனா மிதித்து கொண்டிருக்கிறார்.

அப்பொழுது முத்து அம்மா என கத்துவதற்கு விஜயா என்ன முத்து நம்மள கூப்பிடறான் என்று கதவை திறந்து உள்ளே வந்து பார்க்கிறார்.. அப்பொழுது மீனா முத்துவை போட்டு மிதித்துக் கொண்டிருப்பதை பார்த்து என்ன பண்ணிக்கிட்டு இருக்க உடம்பு வலி என்றால் ஹாஸ்பிடல் போக வேண்டி தானே இப்படி மிதிச்சா சரியாயிடுமா என்று மீனாவை திட்டிவிட்டு பிறகு அண்ணாமலை இடம் போய் அந்த மீனா முத்துவை போட்டு மிதிச்சிட்டு இருக்கா என்று சொல்ல..

அண்ணாமலை உடம்பு வலி என்றால் மிதிச்சா சரியாயிடும் கரெக்டா தானே மீனா பண்றா இதுல என்ன, எனக்கும்தான் நிறைய தடவை முதுகு வலி வந்து இருக்கு நீ இந்த மாதிரி ஒன்னும் பண்ணதில்லை என்று சொல்ல விஜயா இப்ப நான் ஏறி மிதிக்கட்டுமா என்று கேட்கிறார். வேணாம், இப்பதான் ஆபரேஷன் பண்ணிட்டு வந்தேன் திரும்ப ஹாஸ்பிடல் போகணுமா என்று அண்ணாமலை சொல்கிறார் இதோட எபிசோட் முடிந்துள்ளது..