கைமீறி போன பொருட்காட்சி காண்ட்ராக்டை மீண்டும் பாக்கியாவிற்கு வாங்கி தந்த பழனிச்சாமி. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

Baakiyalakshmi today episode november 21 : இன்றைய எபிசோடில் பழனிச்சாமி பாக்யா வீட்டிற்கு வந்து ஒரு இடத்துக்கு போனனும் அவசரமா வாங்க என்று கூப்பிடுகிறார் உடனே ராமமூர்த்தியும் நம்ம தம்பி தான போயிட்டு வாம்மா என்று அனுப்பி வைக்கிறார் இதைப் பார்த்த கோபி என்ன அவன் கூப்பிட்ட உடனே போறா என்று பாக்கியாவை திட்ட வருகிறார் அப்பொழுது ராதிகா உங்க வேலைய பாருங்க என்று என்பது போல் ஜாடை காண்பிக்கிறார்.

பிறகு பாக்கியா பழனிச்சாமியுடன் காரில் சென்று விட்டார் அடுத்து கோபி அவங்க அப்பாவிடம் என்ன அவன் பாட்டுக்கு வந்து கூப்பிட்டான் பாக்யா போய்ட்டா என்று கேட்க தானே போக சொன்ன உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது ராதிகாவும் அங்கு வந்து பாக்யா எங்க போனா உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.. அடுத்து பழனிச்சாமி பாக்கியாவை ஒரு ஹோட்டலுக்கு அழைத்திட்டு போய் இருக்கிறார் பிறகு பாக்கியா இங்கே எதுக்கு வந்திருக்கிறோம் என்று கேட்க..

இவ்வளவு நாள் நம்ம நெனச்ச மாதிரி டிசைன் பண்ணி தந்தது மகா தான் என்று தெரிந்ததும் ஆசிரியத்தில் நிற்கும் சூர்யா

நீங்க பொருட்காட்சி காண்ட்ராக்ட் வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டீங்க இல்ல என்று கேட்க பாக்கியா அதுதான் கைமீறி போயிடுச்சு சார் என்று சொல்ல அந்த காண்ட்ராக்ட் எடுத்தவங்க வேற ஒருத்தவங்களுக்கு கொடுக்கறதா இருக்காங்க.. அதனால அதை உங்களுக்கு தர சொல்லி கேட்டு இருக்கேன் அவங்களும் இங்க வரேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல பாக்யா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.. பிறகு அந்த காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் அங்கு வருகின்றனர் அவர்கள் உங்களுக்கு நாங்க காண்ட்ராக்ட் தரோம்..

அப்படின்னா எங்களுக்கு கொஞ்சம் நீங்க பணம் தரணும் என்று கேட்டு முடிவாக ஒன்றரை லட்சம் பணத்தை கொடுத்து பாக்கியா அந்த காண்ட்ராக்டரை வாங்க உள்ளார்.. காண்டாக்ட்காக முன் பணமாக ஒரு லட்சம் பணம் கொடுத்து இருந்ததை திரும்பி கேட்பதற்காக பாக்கியா அந்த ஆபிசுக்கு சென்று பணம் கேட்கிறார் அப்பொழுது அவர்கள் பணம் வருவதற்கு இரண்டு மாசம் ஆகும் நீங்க போங்க என்று சொல்ல பிறகு பழனிச்சாமி வேறு ஒருவரிடம் போய் பேசுவதும்..

முத்து உடைய சந்தோஷத்திற்காக அண்ணாமலை செய்த காரியம்.. உறைந்து போன ரோகினி, மனோஜ் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அவர்கள் இன்னும் ரெண்டே நாள்ல உங்க படம் வரும் என்று பாக்யாவிடம் சொல்கின்றனர் பிறகு பாக்கியா பழனிச்சாமிக்கு நன்றி சொல்கிறார். அடுத்து பழனிச்சாமி அந்த ஒன்றரை லட்சத்தையும் நானே தரேன்னு சொல்ற நீங்கதான் வாங்க மாட்டேங்கறீங்க.. இப்ப நீங்க பணத்தை வாங்கவில்லை என்றால் நமக்குள்ள நட்பும் இல்ல ஒன்னும் இல்ல தூக்கி போட்டு நான் போயிடுவேன் என்று சொல்ல பிறகு பாக்யா நீங்க இவ்வளவு சொல்றதுக்காக ஒரு லட்சம் மட்டும் எனக்கு கொடுங்க நான் திரும்பி அப்புறம் கொடுத்துவிடுகிறேன் என்று கேட்கிறார்.

அடுத்து ஈஸ்வரி பாக்யாவை இன்னும் காணும் என்று வீட்டில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது கோபி ஈஸ்வரி இடம் பழனிச்சாமி வந்து கூப்பிட்டான் அவன் கூட என்ன ஏதுன்னு கேக்காம பாக்யா கிளம்பி போயிட்டா.. இதெல்லாம் சரி இல்ல அவன் நம்ம வீட்டுக்கு வரது எனக்கு பிடிக்கல என்று சொல்ல இது சின்ன விஷயம் இது ஏன் பெருசு படுத்துற பேசாம இரு என்று ஈஸ்வரி கோபியிடம் சொல்கிறார். இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..