ஆகாதவன் கைபட்டாளே குத்தம் என்பது போல.. பாக்கியாவை மூளையில் உட்கார வைக்க நினைக்கும் கோபி, ஈஸ்வரி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode november 16 : இன்றைய எபிசோடில் பழனிச்சாமி சொன்ன பொருட்காட்சி காண்ட்ராக்ட்க்கு பாக்கியா எழிலை கூட்டிக்கிட்டு போகிறார். அங்கு போனதும் பார்ம் ஃபில் பண்ண முதலில் 10,000 பணம் கட்ட சொல்கின்றனர் அப்பொழுது எழில் நான் போய் ஏடிஎம்ல பணம் எடுத்துட்டு வரேன் அம்மா என்று கேட்க இல்ல வேணாம் என்கிட்ட வீட்டு செலவுக்கான பணம் இருக்கு..

நானே தரேன் என்று பத்தாயிரம் பணத்தை கட்டி பார்ம் பில் பண்ணி கொடுக்கிறார் பிறகு அட்வான்ஸ்சா ஒரு லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று சொல்ல பாக்கியாவும், எழிலும் ஷாக் ஆகின்றனர்.. பிறகு அப்புறம் வந்து பணம் காட்டுறோம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டனர்.. அடுத்து பாக்கியா பழனிச்சாமியை பார்த்து நீங்க சொன்ன பொருட்காட்சி காண்ட்ராக்ட்க்கு போயிருந்தோம்..

ஸ்கூல் முடிச்சிட்டியா தம்பி அட்லீயை கலாய்த்து விட்ட அஜித்.! விழுந்து விழுந்து சிரித்த நயன்தாரா

அட்வான்ஸ் ஒரு லட்சம் பணம் கட்ட சொல்றாங்க.. ஏமாத்திட மாட்டாங்களா வேலை கிடைச்சிடுமா என்று பாக்கியா கேட்க அதெல்லாம் கவர்மெண்ட் ஆபீஸ் இது ஏமாத்திட மாட்டாங்க பணத்துக்கு நீங்க என்ன பண்ணுவீங்க நான் வேணும்னா  உங்களுக்கு கடனா ஒரு லட்சம் பணம் தரட்டா என்று கேட்க பிரண்ட்ஸ்க்குள்ள கடன் வாங்க கூடாது பணத்துக்கு நான் வேற ஏதாவது பண்ணிக்கிறேன்.

என்று பாக்கியா சொல்லிவிட்டு கிளம்புகிறார்.. அடுத்து வீட்டிற்கு வந்ததும் பாக்கியா காண்ட்ராக்ட் கிடைக்க அட்வான்ஸ் ஒரு லட்சம் பணம் கட்ட சொல்றாங்க என்று சொல்வதும் உடனே கோபியும் ஈஸ்வரியும் இதெல்லாம் தேவையில்லாத வேலை இப்ப பணத்துக்கு எங்க போவ என்று பாக்யாவை திட்டுகின்றனர்..

கேப்டனா ஒன்னும் கிழிக்கல.. டாஸ்க்கிலும் தினேஷை டார்கெட் செய்யும் பூர்ணிமா.! BB 7 டைட்டில் வின்னர் விக்ரமா?

பிறகு எழில் அம்மா உனக்கு பணம் நான் ரெடி பண்ணி தரேன் அம்மா என்று சொல்ல அதெல்லாம் வேணாம் நானே பாத்துக்கிறேன் உங்கிட்ட தான் வீட்டு செலவுக்கு நான் பணம் வேணும்னா வாங்கிக்கிறேன் இல்ல, இது என்னோட பிரச்சனை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு..

பிறகு செல்வியிடம் நம்ம மாவு மெஷினை யாரோ கேட்டதா சொன்னல அவங்க கிட்ட வித்திடலாம் பேசு என்று சொல்கிறார்.. மீதி பணத்திற்கு அந்த ஹவுஸ் ஓனரிடம் வாடகை பணத்தை சீக்கிரம் வாங்கி தாங்க மாமா என்று ராமமூர்த்தி இடம் சொல்கிறார்.. இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.