நடந்த எல்லாத்தையும் ஜெனி கிட்ட நீயே சொல்லு செழியனை திட்டிய பாக்கியா.. வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த மாலினி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

Baakiyalakshmi today episode November 04 : இன்றைய எபிசோடில் இனியாவுக்கு காய்ச்சல் அதனால் ஈஸ்வரி, ராமமூர்த்தி, அமிர்தா எல்லோரும் இனியாவை பார்த்துக் கொள்கின்றனர்.. அப்பொழுது கோவிலுக்கு போய் மாலினியை பார்த்த பாக்கியா திரும்ப வீட்டிற்கு வருகிறார். பிறகு ஈஸ்வரி பாக்கியவை பார்த்து இனியாவை எங்கேயாவது நீ பார்த்துக்கிறியா சமச்சி வச்சிட்டு போனா போதுமா அவளே போட்டு சாப்பிடுவாளா என்று கேட்க..

அதான் நீங்க எல்லோரும் இருக்கீங்கல்ல இனியா என்ன சின்ன குழந்தையா என்று பாக்கியா கேட்டுவிட்டு செழியனை உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா என்று தனியாக கூட்டிட்டு போய் நான் மாலினிய பார்த்து பேசிட்டு தான் வரேன் அவ என்ன என்னவோ சொல்றா இந்த போன் முழுக்க மாலினி போட்டோ தான் இருந்தது பத்தாததுக்கு இப்ப  அவ்வளவு போட்டோ அனுப்பி இருக்கா..

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. லியோ படம் உலகம் முழுவதும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

ஜெனி மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைச்சதே ரொம்ப பெரிய விஷயம் அவ என்ன பண்ணுனா உன்னை எவ்வளவு நம்புறா, அவளை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்தது அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்க உங்க அப்பா புத்தி அப்படியே உனக்கு இருக்கு என்று திட்டி விட்டு மரியாதையா ஜெனி கிட்ட நடந்த எல்லா உண்மையை சொல்லு அதுக்கப்புறம் அவ உன்ன ஏத்துக்கிட்டா இங்க இருக்கலாம்..

இல்லனா நீ வெளியே போயிடலாம் ஜெனி என்ன முடிவு எடுக்கிறாளோ நான் அவ பக்கத்துல தான் நிப்பேன் என பாக்கியா சொல்லிவிட்டு ஜெனி கிட்ட நீ இத பத்தி சொல்ற வரையும் என்கிட்ட நீ பேசக்கூடாது என  சொல்றார்.. பிறகு செழியன் ரூமுக்கு போய் ஜெனி கிட்ட உன் கிட்ட ஒன்னு சொல்லணும் என சொல்கிறார் அப்பொழுது பாக்கியாவும் குழந்தையை துடைத்து விடுவதற்காக ரூமிற்கு வருகிறார்.

பாண்டியன் வீட்டு விசேஷத்தை கெடுக்க.. வீம்புக்கு பிறந்தநாள் கொண்டாடும் முத்துவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

பிறகு ஜெனி பாக்யாவிடம் ஏன் செழியன் கிட்ட சரியா பேச மாட்டேங்கிறீங்க செழியனும் ஏதோ ஒரு மாதிரி இருக்கான் என்ன என்று கேட்டு அவன் ஏதாவது தப்பு பண்ணி இருப்பான், அடிச்சு என்னன்னு கேளு என பாக்கியா ஜெனி இடம் சொல்கிறார். ஆனால் ஜெனி செழியன் தப்பு பண்ண மாட்டான் என நம்பிக்கை வைத்து பேசுகிறார்.

பிறகு ஜெனி செழியன் கிட்ட  ஏதோ சொல்லணும் சொன்னியே என்னவென்று கேட்க மறந்துவிட்டேன் என சொல்கிறார். அடுத்து எழில் வீட்டிற்கு வந்து சம்பள பணத்தை பாக்கியா இடம் கொடுக்கிறார் ஆனால் பாக்கியா எனக்கு இப்ப வேணாம் நான் வேணும்னா உன்கிட்ட வாங்கிக்கிறேன் நீயே இதை வச்சுக்கோ என எழிலிடம் கொடுத்து விட்டார்.

பிறகு பாக்கியா மாமனார் மாமியாருக்கு டீ போட்டு கொடுக்கிறார் அப்பொழுது ஈஸ்வரி எனக்கு டீ வேண்டாம் என்று சொல்கிறார் பிறகு கோபியும் ஹாலுக்கு வர ஈஸ்வரியுடன் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுதே மாலினி வீட்டிற்கு வருகிறார்.. மாலினியைப் பார்த்து பாக்கியா  ஷாக் ஆகி நிற்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.