பாண்டியன் வீட்டு விசேஷத்தை கெடுக்க.. வீம்புக்கு பிறந்தநாள் கொண்டாடும் முத்துவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

Pandian stores 2 today episode November 04 : இன்றைய எபிசோடில் பாண்டியன் தன்னுடைய மகள் வீட்டு பேத்திக்கு காது குத்தி வைத்திருக்கிறார் அதனை மைக் செட் கட்டி ஊருக்கு அலோன்ஸ் பண்ணி சொல்கிறார்.. மேலும் குன்னக்குடியில் இருக்கிற எல்லோரும் வாருங்கள் ஒரு வீட்டை தவிர என்று சொல்லி இருக்கிறார்.

இதனால் முத்துவேல், சக்திவேலுக்கும் பாண்டியனுக்கும் வாக்குவாதம் நடந்தது.. பிறகு காந்திமதி வீட்டில் எல்லோரும் நம்மல அசிங்கப்படுத்துவதற்காகவே அந்த பாண்டியன் இப்படி பண்றான் அதனால் நாளைக்கு நம்மளும் ஏதாவது விசேஷம் வைக்கலாம் என்று நினைக்க முத்துவேல் ஓட பிறந்தநாள் அடுத்த மாதம் வருகிறது.

அப்பாவுக்காக மட்டும் தான் உன்னை இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன்.. மீனா மீது கோபத்தில் இருக்கும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசொட்

உடனே சக்திவேல் அதற்காக எதற்கு ஒரு மாசம் வெயிட் பண்ணனும் இது உங்களுக்கு ஐம்பதாவது பிறந்தநாள் அதை நாளைக்கே நம்ப சிறப்பாக கொண்டாடலாம் என்று குமாரவேல் எல்லாரும் பேசிக்கிட்டு இருக்கின்றனர்.. அடுத்து பாண்டியன் வீட்டிற்கு பணியாரம் வாங்கிட்டு வருகிறார் அதனை அரசி, செந்தில் எல்லாரும் சாப்பிடுகின்றனர்.

கதிர் மட்டும் எனக்கு வேண்டாம் என்று சொல்ல பிறகு எல்லோரும் சொல்வதால் சாப்பிடுகிறார்.. பிறகு பாண்டியன் வீட்டில் மது குடித்துக் கொண்டிருக்கிறார்.. அப்பொழுது வடிவேலும் சரவணனும் வீட்டுக்கு வருகின்றனர்.. பாண்டியன் சரவணன் இடம் இவ்வளவு நேரமா வேலை முடிய ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்யாதே என்று சொல்ல உடனே கதிர் அப்ப நாங்கெல்லாம் கஷ்டப்படலாமா என்று கேட்கிறார்..

தங்கை பாசத்தில் வெற்றி கண்டு நூறு நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம்.! இன்றுடன் 40 ஆண்டுகள் இந்நிறைவு..

பிறகு பாண்டியன் குடித்துக் கொண்டிருப்பதை வடிவேலு பார்ப்பதும் நீங்க எல்லாம் குடிக்கலாம் என்று நினைக்காதீங்க மது குடிச்சா நுரையீரல் வீணா போயிடும் பிரச்சனை வரும் என்று சொல்கிறார். அதற்கு கதிர் அப்பா பேசுறதுக்கும் செய்வதற்கு ஏதாவது சம்பந்தம் இருக்கா என்று அம்மாவிடம் சொல்கிறார்..

பிறகு வெளியில் குமாரவேல் மைக் செட் வைத்து நாளைக்கு எங்க பெரியப்பா உடைய ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாடுகிறோம் அதற்கு ஊர்ல இருக்கிறவங்க எல்லாரும் வந்துடனும் என்று அலோன்ஸ் பண்ணுகிறார் இதைக் கேட்டு பாண்டியன் கோபப்பட்டு நம்ம வீட்டு விசேஷம் இருக்கிற அதே நாளில் வேணும்னே இப்படி பண்றாங்க என்று கோமதி மற்றும் வடிவேலுவிடம் நாளைக்கு உங்க அண்ணனுக்கு பிறந்தநாளா என்று கேட்கின்றனர்.

ஆனால் அவர்கள் நாளைக்கு இல்ல அடுத்த மாசம் தான் வரும் என சொல்கின்றனர் உடனே பாண்டியன் வெளியே வந்து நாளைக்கு உங்களுக்கு பிறந்த நாளே இல்ல ஆனா வேணும்னே இப்படி பண்ற என்று சண்டை போடுகின்றனர்.. பிறகு முத்துவேல் நாளைக்கு இரண்டு பேரும் விசேஷம் வச்சிருக்கோம் யார் வீட்டுக்கு விசேஷத்திற்கு அதிக பேர் வராங்கன்னு பார்த்துடலாம்..

சவால் விட்டு சொல்றேன் என் வீட்டுக்கு தான் அதிக பேர் வருவாங்க என்று முத்துவேல் சவால் விடுகிறார்.. அதேபோல் பாண்டியனும் என் வீட்டு விசேஷத்திற்கு தான் எல்லாரும் வருவாங்க என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..