அப்பாவுக்காக மட்டும் தான் உன்னை இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன்.. மீனா மீது கோபத்தில் இருக்கும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசொட்

Sirgadikka Aasai today episode November 04 : இன்றைய எபிசோடில் இந்திரா மீனாவிடம் எத்தனை நாளைக்கு இந்த வீட்டிலேயே இருப்ப, இப்பவே அக்கம் பக்கத்துல கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க என்று சொல்ல அவர் வந்து என் மேல தப்பு இல்லன்னு புரிஞ்சுகிட்டு என்னை கூப்பிட்டால் தான் போவேன் என மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது முத்துவுமும் அங்கு ஓடி வருகிறார். முத்துவிடம் இந்திரா மீனா பண்ணது தப்பு தான் ஏதோ தெரியாம அப்படி பண்ணிட்டா அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கேட்பதற்கு சில பேர நான் நம்புன எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்க என மீனாவை குத்தி காண்பித்து முத்து பேசுகிறார் பிறகு எங்க அப்பா அங்க மாத்திரை சாப்பிடாம உக்காந்து இருக்கிறார்.

தங்கை பாசத்தில் வெற்றி கண்டு நூறு நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம்.! இன்றுடன் 40 ஆண்டுகள் இந்நிறைவு..

நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும் வா என்று முத்து மீனாவை கூப்பிடுகிறார்.. அதற்கு மீனா நான் வரவில்லை என்று சொல்ல இந்திராவும் சீதாவும் சேர்ந்து மீனாவை எழுப்பி முத்துகூட அனுப்பி வைத்துவிட்டனர்.. அண்ணாமலை வீட்டிற்கு வந்ததும் மீனா மாமனாரை பார்த்து கையடுத்து கும்பிட்டு நான் எந்த தப்பும் பண்ணவில்லை அன்னைக்கு ஸ்ருதி கிட்ட கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க என்று பேசி புரிய வைக்க தான் ரவி என்ன கோவிலுக்கு கூட்டிட்டு போனாரு..

அவங்க கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியாது என்ன மன்னிச்சிடுங்க மாமா என்று கேட்க நான் வளர்த்த பசங்களே சரியில்ல மனோஜ் அவன் பங்குக்கு பண்ணுனா ரவி இப்ப இப்படி பண்ணிட்டான் உன் மேல கோபப்பட எனக்கு என்ன இருக்கு.. இருந்தாலும் உன் மேல சின்ன வருத்தம் தான்..

விஜய்க்கு மகனாக நடிக்க லியோ படத்தில் மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அன்னைக்கு கோவிலுக்கு சாமி கும்பிட போறேன்னு சொன்னியே இந்த மாதிரி ஸ்ருதிய பார்த்து பேச போறேன் என்கிற உண்மையை மறைச்சிட்ட இல்ல என்கிட்ட என்று அண்ணாமலை கேட்க மீனா அது நான் பண்ணது தப்பு தான், அதுக்கு எந்த காரணம் சொல்லியும் என்னால நம்ப வைக்க முடியாது என்கிறார்..

பிறகு மீனா மாத்திரை எடுத்து தந்ததும் அண்ணாமலை மாத்திரை சாப்பிடுகிறார். அடுத்த இரவு தூங்கும் போது முத்து மீனாவிடம் நான் இந்த வீட்டுக்கு உன்னை அழைச்சிட்டு வந்துட்டேன் என்பதற்கு உன்னை மன்னிச்சிட்டேன்னு நினைக்காத எங்க அப்பாவுக்காக மட்டும் தான் உன்னை அழைச்சிட்டு வந்தேன்.

மத்தபடி நீ செஞ்ச நம்பிக்கை துரோகத்தை நான் மறக்க மாட்டேன் நமக்குள்ள வேற எதுவும் இல்லை என்று சொல்கிறார் இதை வெளியிலிருந்து கேட்ட அண்ணாமலை பிறகு முத்துவிடம் மீனா கிட்ட அதிகமா சண்டை போடாத கல்யாணம் பண்ணிக்கிட்டு போன ரவியே நல்லா தான் இருப்பான், நீங்க ஏன் அவங்களால சந்தோஷம் இல்லாம இருக்கணும் என்று சொல்ல..

முத்து அதை பத்தி பேச வேணாம் விடுங்க என்று சொல்கிறார்.. அடுத்த நாள் காலையில் மீனா மாமனாரை சாப்பிட கூப்பிடுகிறார் அப்பொழுது விஜயாவும் ரோகிணி அங்கு வந்து பூரி இருப்பதை பார்த்து எண்ணெய் பொருள் எல்லாம் மாமா சாப்பிட்டா அவருக்கு கொலஸ்ட்ரால் வந்துரும் என்று ரோகினி சொல்ல..

நான் மாமாவுக்காக தனியா கஞ்சி வச்சிருக்கேன் என்று சொல்கிறார்.. இந்த பூரிய நாங்க சாப்பிட்டாலும் எங்களுக்கும் கொலஸ்ட்ரால் வரும் என்று ரோகினியும் விஜயாவும் சொல்ல என் புருஷனுக்கு புடிக்கும் அதனால் தான் பூரி செஞ்சேன் என மீனா சொல்லுகிறார்.. இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.