செழியன், ஈஸ்வரி, கோபியை கண்டும் காணாமல் போன ஜெனி.. கோர்ட்டில் நடத்த தரமான சம்பவம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode January 4 : இன்றைய எபிசோடில் எழில் தூங்கி எழுந்து கீழே வந்து செழியனிடம்  என்ன ஆபீசுக்கு கிளம்பலையா என்று கேட்க கோர்ட்டுக்கு போகணும் என்று சொல்கிறார்.. உடனே எல்லோரும் வருத்தப்படுகின்றனர் பிறகு பாக்கியா நான் செழியன் கூட போறேன் என்று சொல்கிறார், ஈஸ்வரி நானும் செழியன் கூட வரேன் என்று சொல்லிவிட்டு கோபி நீயும் வரியா என்று கேட்கிறார்.

அதற்கு கோபி என் பசங்க கூட இருக்குறதோட எனக்கு வேற என்ன முக்கியமான வேலை நானும் வரேன் என்று சொல்லிவிட்டு ராதிகா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வரேன் என்று சொல்கிறார் அதற்கு ஈஸ்வரி ராதிகா கிட்ட சொல்லப் போறியா, இல்ல பர்மிஷன் கேட்க போறியா என்று கேட்க ராதிகா அந்த மாதிரி எல்லாம் இல்ல நான் சொன்னா ஒன்னும் சொல்ல மாட்டா என்று சொல்லிவிட்டு ராதிகா ரூமுக்கு போகிறார்.

எவ்வளவு பணம் வேணாலும் தரேன் என்ன காப்பாத்து தோழியிடம் கதறும் ஐஸ்வர்யா.. குஷியில் சித்ரா தேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அங்கு ராதிகா நான் ஆபீசுக்கு கிளம்பிட்டேன், இன்னும் கிளம்பாம இருக்கீங்க போற வழியில என்ன டிராப் பண்ணிடுங்க என்று சொல்ல, இன்னைக்கு செழியனுடைய கேஸ் கோர்ட்டுக்கு வருது அதனால நான் கோர்ட்டுக்கு போக வேண்டும் என சொல்வதும் யார் யார் போறீங்க நீங்க மட்டும் செழியன் கூட போறீங்களா வேணும்னா நானும் வரட்டுமா என்று ராதிகா கேட்க இல்ல..

நான் செழியன் அம்மா பாக்கியா நாங்க நாலு பேரும் போறோம் என்று சொல்வதும் உடனே ராதிகா செழியன் கூட போக ஆள் இல்லைன்னா நீங்க போகலாம் சரி, ஆனா பாக்கியா உங்க அம்மா எல்லாம் போகும்போது எதுக்கு நீங்க தேவையில்லாத போகணும், உங்க பசங்களுக்கு ஒரு பிரச்சனைனா நீங்க போகலாம் ஆறுதலா இருக்கலாம் ஆனா எல்லாமே ஒரு அளவா இருக்கணும் என்று கோபிக்கு ராதிகா கண்டிஷன் போடுகிறார்.

ஏன் டா தயாரித்தோம் என முக்காடு போட்டு மூலையில் உட்காரவைத்த கமலின் 4 படங்கள்.!

அடுத்து கோர்ட் வாசலில் பாக்யா, செழியன் எல்லோரும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது அட்வகேட் வருகிறார் அவரிடம் இவங்க ரெண்டு பேருக்கும் விவாகரத்து ஆயிடுமா என்று கேட்க, இன்னைக்கு ஜஸ்ட் ஃபார்மாலிட்டி தான் அடுத்தடுத்த இயரிங்கள தான் தெரியும் என அட்வகேட் சொல்லுகிறார்.

பிறகு ஈஸ்வரி அவ பிடிவாதமா இருந்தா இவங்களுக்கு விவாகரத்து ஆனாலும் குழந்தைய எங்க கிட்ட வாங்கி கொடுத்துடனும் என்று சொல்கிறார். அப்பொழுது ஜெனி அவங்க அப்பாவுடன் அங்கு வருகிறார் செழியன் ஈஸ்வரி பாக்கியா எல்லோரையும் ஜெனி பார்த்து எதுவும் பேசாமல் உள்ளே போவதும் உடனே ஈஸ்வரி என்ன திமிரு அவளுக்கு பாத்தும் பாக்காத மாதிரி போறா என்று ஜெனி மேல் கோபப்படுகிறார்.

பிறகு அமிர்தா வீட்டில் உள்ளவர்களிடம் பேச சங்கடப்பட்டு கொண்டு ரூமில் வந்து உட்கார்ந்திருக்கிறார் அப்பொழுது ராதிகா அமிர்தாவிடம் வந்து நீ ஏன் கீழ வந்து எல்லோர்கூடயும் சகஜமா பேசாம இங்க வந்து உட்கார்ந்து இருக்க உன்மேல எந்த தப்பும் இல்லையே, இந்த மாதிரி நடக்கணும்னு யாரும் எதிர்பார்க்கலை இப்ப என்னோட வாழ்க்கையை எடுத்துக்கோ என்னோட ஃபர்ஸ்ட் கணவர் ராஜேஷ் நான் டிவோஸ் பண்ணிட்டு தான் கோபி கூட வந்து வாழ்கிறேன்.

இப்ப அவர் திரும்ப வந்து என்னையும் மையூவையும் கூப்பிட்டால் நான் போக மாட்டேன் அந்த மாதிரி தான் நீயும் கணேஷ் இறந்துட்டதா நினைச்சு வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்க, அவரு திரும்பி வந்தது சந்தோஷம்தான் அவங்க அப்பா அம்மா கூட சந்தோஷமா இருக்கட்டும், வேற ஒரு வாழ்க்கையை அவர் அமைச்சுக்கட்டும் நீ எழில் கூட சந்தோஷமா இரு, இத பத்தி பெருசா யோசிக்காத என்று அறிவுரை சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது