எவ்வளவு பணம் வேணாலும் தரேன் என்ன காப்பாத்து தோழியிடம் கதறும் ஐஸ்வர்யா.. குஷியில் சித்ரா தேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode January 4 : இன்றைய எபிசோடில் சூர்யா ஆபீசுக்கு போட்டு போவதற்காக எடுத்து வைத்திருந்த டிரஸ்ஸ காணும் என்று தேடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது மகாவிடம் என்னோட டிரஸ்ஸ எங்க ஒளிச்சு வச்சிருக்க என்று கேட்க நான் ஒளிச்சி எல்லாம் வைக்கல, எப்பவும் போல அயன் பண்ணி தான் வச்சிருக்கேன் என சொல்வதற்கு..

நீ ஏன் அயன் பண்ண புருஷன் பேச்சுக்கு மரியாதை கொடுக்காத நீ எதுக்கு எனக்கு வேலை செய்ற என்று சொல்கிறார். பிறகு மகா தேங்க்யூ கடவுளே என்கிட்ட பேசக்கூடாதுன்னு பிடிவாதமா இருந்தவர பேச வச்சுட்டுட, அது மட்டும் இல்லாம என்ன பொண்டாட்டின்னு சொல்ல வச்சுட்ட என்று மகா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஏன் டா தயாரித்தோம் என முக்காடு போட்டு மூலையில் உட்காரவைத்த கமலின் 4 படங்கள்.!

அடுத்து ஐஸ்வர்யா நைட்டு பிரியாணி சாப்பிட்டது ஒத்துக்காமல் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒரே நாள்ல உடம்புல மாற்றம் வரணும்னு அதிகமா பிரியாணி சாப்பிட்டது இப்ப இப்படி ஆயிடுச்சு என்று ஐஸ்வர்யா சொல்கிறார். பிறகு பானுமதி பாட்டி ஐஸ்வர்யாவை பார்த்ததும் என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் சித்ராதேவியும், கௌதமும் அங்கு வருவதும்..

ஐஸ்வர்யாவை இரண்டு பேரும் சேர்ந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்க என சொல்வதற்கு சித்ராதேவி நானெல்லாம் கூட்டிட்டு போக முடியாது என்று சொல்கிறார் பிறகு பானுமதி பாட்டி மாசமா இருக்கிற பொண்ணுக்கு உடம்பு முடியாதப்ப ஒரு லேடி கூட இருக்கிறது இல்லையா, போயிட்டு வா என்று சொல்வதும் பிறகு கௌதம் அம்மா எனக்கு ஒரு ஐடியா தோணுது என்று சொல்கிறார்.

என்னது விஜயகாந்த் ஹீரோவா என்னால் நடிக்க முடியாது.. என் கேரியர் அவ்வளவுதான் எனத் தெரித்து ஓடிய 5 நடிகைகள்..

உடனே சித்ராதேவி என்ன ஹாஸ்பிடல் போய் யாரையாவது வச்சு அவளோட கர்ப்பத்தை கலச்சிடலாம்னு பிளான் பண்றியா என்று கேட்க ஆமாம் அம்மா என கௌதம் சொல்கிறார்  உடனே நம்ம ரெண்டு பேரும் தான் ஐஸ்வர்யாவ கூட்டிட்டு போறோம் அதனால அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்ம மேல தான் பழி வந்து சேரும் அதுவும் அந்த மகா நம்மள சும்மா விட மாட்டார் என்று சொல்கிறார்..

பிறகு ஐஸ்வர்யா நம்ம ஹாஸ்பிடல் கௌதம் கூட போன மாட்டிப்போமே என்று அவருடைய பிரண்டு ஒருவருக்கு போன் பண்ணி நான் உன்னோட ஹாஸ்பிடலுக்கு வரேன் என்று சொல்ல நான் கோவிலுக்கு கிளம்பி கிட்டு இருக்க ஹாஸ்பிடலுக்கு போகல என அவர் சொல்வதும் பிறகு ஐஸ்வர்யா எவ்வளவு பணம் செலவானாலும் பரவால்ல நீ வேற யாருகிட்டயாவது சொல்லி பொய் சொல்ல சொல்றியா என்று கேட்க..

டாக்டர் நா உனக்கு அவ்வளவு கேவலமா ஆச்சா யாரும் அந்த மாதிரி எல்லாம் பொய் சொல்ல மாட்டாங்க நீ உங்க வீட்ல உண்மைய சொல்றது தான் நல்லது என்று சொல்லிவிட்டு அவர் போனை வைத்து விட்டார்.. அடுத்து மகா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது காயத்ரி வருகிறார் அப்பொழுது சின்ன அத்தை நீங்கதான் எனக்கு இந்த வீட்ல கொஞ்சம் சப்போர்ட்டா இருந்தீங்க நீங்க என்கிட்ட பேசாதது.

ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க மட்டும் என்கிட்ட பேசுங்க நான் அதை வச்சு எல்லாரையும் பேச வச்சுருவேன் அதுக்கு ஒரு பிளான் இருக்கு என்று காயத்ரியிடம் மகா ஒரு பிளானை சொல்கிறார்.. பிறகு மகா கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்கிறார் அதைப் பார்த்த ராஜலட்சுமி காயத்ரியை கூப்பிட்டு உன்னதான சமைக்க சொன்னேன், ஏன் மகா சமைச்சிட்டு இருக்கா என்று கேட்டு காயத்ரி காய் நறுக்கும் பொழுது கையை நறுக்கிக்கிட்டேன்.

கைல காயம் ஆயிடுச்சி என்று கையை காண்பிக்கிறார் பிறகு மகா எல்லாத்தையும் சமைத்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு அந்த சாப்பாட்டுக்கான பெயரையும் பேப்பரில் எழுதி பக்கத்தில் வைத்து விட்டார் எல்லோரும் சாப்பிட வருகின்றனர் பிறகு என்ன மகா சாப்பாட்டுக்கு மெனு எல்லாம் எழுதி வச்சிருக்க, மௌன விரதமா என்று ராகவ் கேட்க பானுமதி அது அத்தை விரதம், உன் பொண்டாட்டி ராஜலக்ஷ்மி தான் மகா கிட்ட நாங்க யாரும் பேச கூடாதுன்னு சொல்லி கண்டிஷன் போட்டா என்று சொல்வது உடனே ராகவ்..

அப்படி மகா என்ன தப்பு பண்ணினா ஒரு பொண்ணு பொறந்த வீட்டுக்கு போய் அவளுக்கு புடிச்ச வேலையை செய்யறதுல எந்த தப்பும் இல்லை என்று எல்லோரும் சொல்வதும் உடனே ராஜலட்சுமி உங்களுக்கு எல்லாம் கண்டிஷன் போட்டது என்னோட தப்பு தான் ஆனா என்னோட கடைசி மூச்சி இருக்குற வரையும் மகா மேலா இருக்கிற என்னுடைய எண்ணம் மாறாது என்று ராஜலட்சுமி சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..