அமிர்தாவை வைத்து கணேஷ் மனதை மாற்ற பிளான் போட்ட ராதிகா.. களமிறங்கும் குடும்பம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode January 3 : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் அமிர்தா அழுது கொண்டிருக்கிறார் அப்போது எழில் பயப்படாத ஒன்றும் ஆகாது நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார் பிறகு எழில் அமிர்தா என்ன விட்டுட்டு போயிட மாட்டியே என்று கேட்க அமிர்தா நான் உங்க கூட தான் இருப்பேன் என்று எழில் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

பிறகு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா யாராலயும் நம்பல பிரிக்க முடியாது நம்ம எடுக்கற முடிவுதான் என்று சொல்கின்றனர்.. அடுத்து கோபியும், அம்மா ஈஸ்வரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது ராதிகா கோபி இடம் மேல ஒரு ரூம்ல பழைய பொருள் எல்லாம் கடந்தது இல்ல, அந்த ரூம்ல கிளீன் பண்ணி வச்சிருக்கேன் நம்ம அங்க போய் தூங்கலாம் என்று கேட்க ஈஸ்வரி கோபி என்கூடவே இருக்கட்டும்..

சிவகார்த்திகேயனின் “அக்கா குடும்பத்தை” பார்த்து உள்ளீர்களா.? லைக்குகளை குவிக்கும் புகைப்படம்

அவனுக்கு உடம்பு சரியில்லை நானே அவனை பாத்துக்குறேன் நீ இந்த ரூம்ல கீழ தூங்க மாட்டியா என்று கேட்க, மாமா வெளியப்படுத்துகிறார் அதனால் நீங்களும் மாமாவும் இந்த ரூம்ல இருங்க நாங்க போய் மேல படுத்துகிறோம் என்று சொல்ல பிறகு கோபியும் ராதிகாவும் மேல் உள்ள ரூமிற்கு போய்விட்டனர். அப்பொழுது கோபி ராதிகாவிடம் அன்னைக்கு கணேஷ் வந்ததும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல..

திடீர்னு ஏதோ ஒரு தைரியம் வந்துச்சு அப்படி பேசிட்டேன் ஆனா எனக்கு உள்ளுக்குள்ள அடுத்து என்ன பண்றதுன்னு பயமா தான் இருக்கு என்னோட சின்ன பையன் எழிலுக்கு என்ன அதிகமா பிடிக்காது எங்க ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை தான் வரும் அவன் அவங்க அம்மா பையன் தான் இருந்தாலும் அவனுக்கு ஒரு பிரச்சனைன்னு இருக்கும்போது என்னால தாங்கிக் கொள்ள முடியல என்ன தான் இருந்தாலும்..

கோடி ரூபாய் கொடுத்தாலும் 5 கொள்கையில் இருந்து மாறாத விஜயகாந்த்.. அதனாலதான் இவரை கேப்டனு சொல்றாங்க

அவன் என்னோட ரத்தம் இல்ல, எழில் ரொம்ப நல்லவன் தான் அடுத்து என்ன பண்றது என்று ராதிகாவிடம் கேட்கிறார். அதற்கு ராதிகா இப்ப ராஜேஷ் வந்து என்னையும் மையுவையும் கூப்பிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்று கேட்க அது எப்படி ராஜேஷ் உங்களை கூப்பிடுவான் பழைய வாழ்க்கையை மறந்துட்டு தானே நம்ம மூணு பேரும் சந்தோஷமா இருக்கோம் என்று கோபி சொல்ல..

அதே போல் தான் அமிர்தாவும் பழைய வாழ்க்கையை மறந்ததுட்டு எழில் கூட ரொம்ப சந்தோஷமா இருக்கா அவங்க ரெண்டு பேரும் ரொம்ப உயிராக இருக்காங்க அதனால அவங்கள பிரிக்க முடியாது இரண்டு பேரும் சேர்ந்து இருக்கிறது தான் நியாயம் அமிர்தா எழில் மேல தான் உயிரா இருக்காங்கிறதை கணேசுக்கு புரிய வைக்கணும், அதுக்கான வழியை பார்க்கலாம் என்று சொல்கிறார்.

அடுத்து நிலா எழுந்து வந்து எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்லுகிறார். அப்பொழுது நிலாவை ராமமூர்த்தி மடியில் தூக்கி வைத்து இந்த குழந்தை இல்லாமல் நாம் எப்படி இருப்போம் நிலா எழிலை அப்பா அப்பான்னு உயிராய் இருக்கு இந்த பாப்பா இல்லை என்றால் நாம் என்ன பண்றது என்று எமோஷன் ஆகி அழுகிறார்..

பிறகு இனியா இன்னைக்கு நான் காலேஜுக்கு லீவு போட்டு வீட்ல இருக்குடா என்று கேட்க ராமமூர்த்தி வீட்டில் நடக்கிற பிரச்சனை எல்லாம் பெரியவங்க நாங்க பாத்துக்குறோம் நீ ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாரு  என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.