செழியன் சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப் போட்ட மாலினி.! கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா.!

Baakiyalakshmi serial today episode : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் தலை வலிக்குது எனக் கூறி கோபி படித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது மெல்ல எழுந்திருக்கிறார் உடனே ராதிகா வந்து இப்ப பரவாயில்லையா இப்ப ஓகேவா என கேட்க கொஞ்சம் பரவாயில்லை ஆனா இன்னும் வலிக்குது,  எதனால தலைவலி வந்தது என கேட்க ஆபீஸில் சின்ன பிரச்சனை அது உனக்கு சொன்னா புரியாது என கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் பினான்சியல் ப்ராப்ளம் இருக்கு என நாசுக்காக கோபி ராதிகாவிடம் கூற அதெல்லாம் நீங்க தான் பாத்துக்கணும் இதெல்லாம் ஒரு காரணமா என பேசுகிறார். மேலும் உங்க ஆபீஸ் சின்ன ஆபீஸ் எங்க ஆபீஸ் எவ்வளவு பெரிய ஆஃபீஸ் இங்க உள்ள பிரான்ச் பெங்களூர் பிரான்ச் எல்லாத்தையும் நான் தான் பாத்துக்குறேன். எனக்கு எவ்வளவு டென்ஷன் இருக்கும் நான் அந்த தலைவலியோட தான் வீட்டுக்கு வரேன் ஆனா நான் எதையும் சொல்லல நீங்க சொல்றீங்க அவ்வளவுதான் என பேசுகிறார்.

விஜயகாந்த் சொன்னதை அப்பவே கேட்டிருந்தால் இன்று எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது பிரபல நடிகை வருத்தம்.!

பிறகு நீங்க ரெண்டு பேரும் பர்ச்சேஸ் பண்ணிவிட்டு வாருங்கள் என கூற ராதிகா இப்போ ஒரு டைம் அப்புறம் ஒரு டைம் போக முடியுமா நீங்க என்னைக்கு வரீங்களா அன்னைக்கு போகும் என கூறி விடுகிறார் அடுத்த காட்சியில் அடுத்த நாள் மாலையில் அவசர அவசரமாக கோபிக்கு போன் பண்ணி வீட்டிற்கு வர சொல்கிறார் ராதிகா.

இன்னைக்கு எப்படியாவது நம்ம பர்சேஸ் பண்ண போறோம் என தன்னுடைய மகள் மயூவிடும் ராதிகா கூறிக் கொண்டிருக்கிறார் கோபி வந்தவுடன் என்ன பிரச்சனை ஏதாவது அவசரமா எதற்காக கால் பண்ணுனீங்க என கேட்கிறார் அதற்கு ராதிகா அது சர்ப்ரைஸ் இன்னைக்கு ஒரு இடத்துக்கு போறோம் என கூறுகிறார். ஆனால் கோபி மண்டையை பிச்சு கொண்டு இருக்கிறார் ஒரு வழியாக ஷாப்பிங் போகிறோம் என கூறிவிடுகிறார்கள்.

அதுவும் கோல்ட் மஹால் இடத்திற்கு தான் போகிறோம் என கூற கோபி அதிர்ச்சி அடைகிறார் என்னால கிரெடிட் கார்டு பில்லையே கட்ட முடியல இவ வேற என்ன விட மாட்டாளே என தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறார். ஆசை ஆசையாக வந்த கோபிக்கு காபி போட்டு கொடுத்து அவர் தலையில் இடியை இறக்கி வைக்கிறார் ராதிகா ஆனால் கோபியிடம் பணமே இல்லாமல் எப்படி நகை எடுக்கப் போகிறார் என்று குழப்பத்தில் இருக்கிறார்.

வர்ற கோபத்துக்கு சூர்யாவை கொன்னுடுவேன்.. கௌதமுக்கு பிளான் போட்டு கொடுத்த சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

மற்றொரு பக்கம் செழியன் ஜெனிக்கு புடவை வாங்கிக்கொண்டு கொடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் எழில் அம்மாவுக்கு வாங்கிட்டு வந்தியா இவ்வளவு நாள் அம்மா உன் கூட இருக்காங்களே எனக் கூற அவங்களுக்கும் ஒரு புடவை வாங்கி கொடுக்கிறார் இப்படி குடும்பமே சந்தோஷமாக இருக்கும் பொழுது திடீரென குழந்தை அழுவதால் ஜெனி மாடிக்கு சென்று விடுகிறார் அந்த சமயத்தில் மாலினி போன் பண்ணி செழியன் சந்தோஷத்தை கெடுக்கிறார்.

போனை பார்த்த செழியன் திரு திரு என்று முழிக்க மாடிக்கு செழியன் வேலை இருக்கிறதாக கூறிவிட்டு செல்கிறார் அந்த சமயத்தில் எழிலிடம் பாக்கியா இவனோட போக்கே சரியில்ல அந்த மாலினி கிட்ட ஏதோ வசமா சிக்கிக்கிட்டான் அதனால அடிக்கடி போன் பண்ணி டார்ச்சர் பண்ணுகிறார் என உண்மையை எழிலிடம் கூறிக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.