வர்ற கோபத்துக்கு சூர்யாவை கொன்னுடுவேன்.. கௌதமுக்கு பிளான் போட்டு கொடுத்த சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode October 18 : இன்றைய எபிசோடில் ஆபீஸில் சூர்யாவை கேட்காமல் பவித்ரா மெயில் அனுப்பியதால் கோபப்பட்டு சூர்யா பவித்ராவிடம் யார கேட்டு மெயில் பண்ண என்று கேட்க உடனே கௌதம் அப்பொழுது வந்து ப்ரோ நான் தான் மெயில் பண்ண சொன்னேன் என்று சொல்ல சூர்யா என்ன கேட்காமல் நீ எதுவும் பண்ணக்கூடாது 5 கோடி ரூபாய் பிசினஸ் கையை விட்டு போக பார்த்தது.

இனிமே இந்த ஆபீஸ்ல வேலை செய்ற ஒர்க்கர்ஸ்சும் சரி  கௌதமும் சரி என்ன கேட்காம எதுவும் பண்ண கூடாது என சூர்யா சொல்லிவிட்டார்.. பிறகு சூர்யா வீட்டிற்கு வந்ததும் அவரை நிற்க வைத்து சித்ராதேவி எப்படி என் பையன நீ ஆபீஸ்ல எல்லாரும் முன்னாடி அசிங்கப்படுத்தலாம்.. என்று கேட்க சூர்யா நான் கௌதம திட்டல இனிமே..

நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான் பஞ்ச் டயலாக் பேசி அர்ஜுனிடம் சவால் விடும் கோதை.!

இது போல பண்ணாதன்னு அறிவுரை தான் கொடுத்தேன் என்று சொல்கிறார்.. பிறகு சித்ராதேவி விஜயும் தான் ஆபீசுக்கு எப்ப வரான் போறான்னே தெரியல, அவன எல்லாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க என் பையன் கௌதம் மட்டும் உங்க எல்லாருக்கும் எலக்காரமா போயிடுச்சு இல்ல என்று கேட்க உடனே விஜய் ஓட அப்பா அம்மா சித்ராதேவி இடம் சண்டைக்கு வருகின்றனர்.

பிறகு சூர்யா அவங்க அம்மா ராஜலட்சுமி இடம் கௌதமை என் தம்பியா தான் நினைக்கிறேன் அவன நான் திட்டினாலும் அதை உடனே மறந்திடுவேன் ஆனால் கௌதம் அதை நினைத்து என் மேல் வெறுப்பை உண்டாக்கிறான் என வருத்தப்படுகிறார் பிறகு கௌதம் சித்ராதேவியிடம் ஆபீஸ்ல எல்லாரும் முன்னாடியும் என்ன அவமானப்படுத்திட்டான்.

லியோ படத்திற்கு 7 மணி காட்சி.? ரசிகர்கள் கொண்டாட்டம்

எனக்கு வர கோபத்துக்கு சூர்யாவை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடலாம் போல இருக்கு என்று சொல்ல சித்ராதேவி அப்படி எல்லாம் பண்ணாத அந்த ஆபீஸ்ல சூர்யாவோட எம்டி சீட்ட நீ புடிச்சிட்டு அதுக்கப்புறம் இந்த சொத்து முழுசையும் நம்ப தான் அனுபவிக்கணும் அதுக்கு என்ன பண்றதோ அதை மட்டும் பண்ணு என சொல்கிறார் இதோட இந்த எபிசோட் முடிந்துள்ளது..