நேருக்கு நேராக அமிர்தாவை அழைத்த கணேசன்..! அதிர்ச்சியாகும் எழில்.. பாக்கியலட்சுமி இந்த வாரப் ப்ரோமோ

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது சமீப காலமாக டல் அடித்து வந்த பாக்கியலட்சுமி சீரியல் கொஞ்சம் சுவாரசியத்தை அதிகரிக்க பாக்கியலட்சுமி சீரியலில் இறந்து போனதாக கூறிய அமிர்தாவின் கணவரை உயிரோடு கொண்டு வந்தார்கள். அவர் உயிரோடு வந்தது அட இதெல்லாம் ஒரு கதையா ஒரு பொண்ணுக்கு ரெண்டு புருஷனா என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள்.

அப்படி இருக்க பாக்யா கேண்டின் ஆர்டரை எடுத்து சரியாக நடத்துவாரா என பலரும் எதிர்பார்த்த நிலையில் பல தடைகள் வந்தாலும் அதனை அனைத்தையும் உடைத்தெறிந்து  கேண்டின் ஆர்டரை பிளான் செய்தது போல் வெற்றிகரமாக முடித்தார். அதேபோல் பொருட்காட்சிக்கு வந்த கணேஷ், நீங்களே அமிர்தாவிடம் பேசி விடுங்கள் இல்லை என்றால் நானே நேரடியாக வந்து பேசி விடுவேன் என மிரட்டி விட்டு சென்றிருந்தார்.

அம்மாவை மலை போல் நம்பிய தமிழ்.. பெத்த மகன் என்று கூட பார்க்காமல் பச்சை துரோகத்தை செய்த கோதை..! பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

மற்றொரு பக்கம் ஜெனி எதுவுமே சொல்லாமல் செழியன் ஜெனி உடன் சேர முடியாத அளவிற்கு இன்னும் படும் பயங்கரமான நிகழ்வு நடந்தது அதாவது செழியன் தான் அழைத்து மால்னியை கூப்பிட்டது போல் ஜெனியின் அப்பாவிடம் மாலினி கூறுகிறார் இதனால் மாலினியின் அப்பா கடும் கோபமாக வீட்டிற்கு சென்றார். இப்படி பாக்கியாவை சுற்றி பல பிரச்சனைகள் சுற்றிக் கொண்டிருந்தாலும் அனைத்து தடைகளையும் உடைத்து எறிந்து முன்னேறி வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அமிர்தா எழில் இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளார்கள் அப்பொழுது அமிர்தா நான் அர்ச்சனை தட்டை வாங்கிக் கொண்டு வருகிறேன் என செல்கிறார். அந்த சமயத்தில் கணேஷ் வந்து அமிர்தா என அழைக்கிறார் அமிர்தா திரும்பி கணேஷை பார்க்கும் பொழுது அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் ஓடி வந்து எழிலிடம் கூற வருகிறார் ஆனால் சமயத்தில் மயக்கம் அடைந்து விடுகிறார்.

நயன்தாராவின் முன்னாள் காதலன் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

கீழே விழப் போன அமிர்தாவை தாங்கி பிடிக்கிறார் எனில் ஆனால் அமிர்தா மேல் கையை வைக்க விடாமல் ஏழிலின் கையை தடுக்கிறார் கணேசன் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது..