படையப்பா ரஜினி போல் முன்னேற போகும் பாக்கியா.! கோபிக்கு நறுக்குன்னு குட்டு வைத்த ராதிகா..

Baakiyalakhmi Serial: பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் பாக்கியா மற்றும் பழனிசாமி இருவரும் கம்பளைண்ட் கொடுத்தவரின் போட்டோவை பார்க்க பாக்கியா இவர்தான் 2 லட்சம் ரூபாய் தரும் காண்ட்ராக்டை கொடுத்தது என்று கூறுகிறார். பிறகு பாக்கியா, செழியன், எழில், பழனிச்சாமி என அனைவரும் பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் பாக்கியா இவர் கேண்டின்கு வந்ததே கிடையாது என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோதாண்டம் வருகிறார்.

எனவே இதனை பார்த்து கடுப்பான செழியன் அனைவர் முன்பும் அடிக்க செல்கிறார். பிறகு ராமமூர்த்தி தடுத்து நிறுத்துகிறார் இந்த நேரத்தில் கேண்டினை ஆய்வு செய்ய அதிகாரிகள் வர பத்திரிகையாளர்களும் குவிந்து வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டிருக்க இந்த நேரத்தில் கேண்டினில் எந்தவித தவறும் நடக்கவில்லை எல்லாம் சுத்தமாக தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள் இதனால் கோதாண்டம் அதிர்ச்சி அடைகிறார்.

ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய லாபம் பார்த்த விஷாலின் ரத்னம் படம்.. வெளிவந்த அப்டேட்

உடனே அது எப்படி நான் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கேன் போட்டோ ஆதாரம் கூட இருக்கு என கூறி விட்டு அந்த போட்டோவை காமிக்கிறார். பிறகு பாக்கியா கேண்டினில் வாங்கிய பில் எங்கே இன்று கேட்க பிள்ளை கிழித்து போட்டு விட்டதாக சொல்லி சமாளிக்கிறார். அதன் பிறகு பொருட்காட்சிக்கான பில் எங்கே என்று கேட்க அதுவும் இல்லை என்று சொல்ல சரிங்க போன் நம்பர் சொல்லுங்க அத வச்சு தான் பில் போட்டு இருப்போம் என்று கேட்க கோதாண்டம் அங்கிருந்து தப்பித்து ஓடி விடுகிறார்.

அதிகாரிகளும் இனிமேல் எந்த பிரச்சனையும் கிடையாது நீங்கள் கேண்டினை திறந்து நடத்தலாம் என கூறிவிட்டு கிளம்பி விடுகின்றனர். இந்த நேரத்தில் கோபி பெரிய பிரச்சனையாகும் அந்த ஈஸ்வரி யார் என்று கேட்பார்கள் இதனால் உங்களுக்கு கூட பிரச்சனை வரலாம் என்று பயமுறுத்துகிறார். பிறகு செழியன் மற்றும் ராமமூர்த்தி இருவரும் வீட்டிற்கு வர ஈஸ்வரி என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் செய்த உதவி..! லிஸ்ட் பெருசா போகுது

பாக்கியா கேண்டினில் எந்த பிரச்சனையும் இல்லை எல்லாம் தரமானதாக தான் இருக்கிறது என்று அதிகாரிகளே சொல்லிட்டாங்க முன்பே விட இப்ப கிடைச்சது தான் பெரிய விளம்பரம் இனிமேதான் கெண்டினில் வியாபாரம் பிச்சிகிட்டு போகப் போகுது என்று கூறிய மகிழ்ச்சி அடைகிறார். இதனைக் கேட்டு ராதிகாவும் மகிழ்ச்சியாக சந்தோஷமடைய இதனைப் பார்த்துவிட்டு கடுப்பான கோபி ராதிகா பின்னாடி செல்கிறார்.

நீ எதுக்கு சிரிச்ச என்று கேட்க நல்ல விஷயம் நடந்திருக்கு அதனாலதான் சிரிச்சேன் என்று சொல்கிறார். பாக்கியாவுக்கு மட்டும் இல்லை யாருக்கு நல்லது நடந்தாலும் நான் சந்தோஷப்படுவேன் அதுதான் என்னுடைய இயல்பு என ராதிகா பதிலடி கொடுக்கிறார். அப்படினா நீ எதுக்கு பாக்கியாவோட கேன்டீன் காண்ட்ராக்டை கேன்சல் பண்ண என்று கேட்க அதனால தான் அவங்க இன்னைக்கு இவ்வளவு பெரிய காண்ரெக்ட் எடுத்து இருக்காங்க நான் அவுங்களுக்கு நல்லது தான் பண்ணி இருக்கிறேன் என்று கூறுகிறார்.