பாக்கியா தலையில் இடியை இறக்கிய கோதாண்டம்.. போலீஸ் கேஸ் வரை சென்ற கேண்டின் ஆடர்

Baakiyalakhmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடில் பேங்கில் இருந்து கோபியை பார்க்க ஆபிஸர்கள் வந்திருக்கும் நிலையில் வெளியே அழைத்து சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா எதிரே வர கோபி அதிர்ச்சி அடைகிறார்.

இரண்டு நாட்கள் மட்டும் டைம் கொடுங்க இந்த விஷயம் வீட்ல யாருக்கும் தெரியாது ஆனால் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று கெஞ்சி அனுப்பி வைக்கிறார். ராதிகா கோபியிடம் பேங்கில் இருந்து தானே வந்திருக்காங்க என்ன விஷயம் என்று கேட்கிறார் அதற்கு கோபி கிரிடிட் கார்டு வாங்க சொல்லி கேட்டுகிட்டே இருக்காங்க எனக் கூறி சமாளிக்கிறார்.

2023 – ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்.. விஜய்யை முந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அப்பொழுது ராதிகா பிசினஸ் டல்லா தானே போகுது அப்படி இருக்கும்போது எப்படி கிரெடிட் கார்டு தரேன்னு சொல்றாங்க என்று கேட்க அதெல்லாம் இப்ப சரியாயிடுச்சு நல்லா தான் போய்கிட்டு இருக்கு என்று சொல்லி விடுகிறார். இந்த நேரத்தில் பாக்யாவின் கேண்டினுக்கு சீல் வைத்து மூடப்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வர செழியன் தாத்தாவிடம் சொல்ல இருவரும் பதறியடித்து கிளம்புகிறார்கள். இதற்கு கோபி இந்த விஷயம் இப்படியே முடியாது போலீஸ் கேஸ் வரையும் போகும் என ஈஸ்வரியிடம் சொல்லி பயமுறுத்துகிறார். கேண்டீன் முன்பு பலரும் வந்திருக்க இந்த நேரத்துல பத்திரிக்கையாளர்கள் பாக்யாவிடம் உணவை தரம் இல்லாமல் கொடுத்தது தப்பு தானே என்று கேட்கிறார்கள்.

இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி இருந்தா என்ன.. ஜப்பான் OTT ரிலீஸ் கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

இதற்கு செல்வி உண்மை என்னன்னு தெரியாம வந்து இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்காதீங்க என திட்டி அனுப்புகிறார். யார் இவ்வாறு கேஸ் கொடுத்து இருக்கிறார்கள் என்பது குறித்து செழியன் மற்றும் பழனிசாமி இருவரும் ஆபீசுக்கு சென்று விசாரிக்கிறார்கள். அப்பொழுது கோதண்டம் என்பவர்தான் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாக தெரியவர இதோடு பாக்கியலட்சுமி சீரியல் இன்று எபிசோட் நிறைவடைகிறது.